விருதுநகர், ஏப்.23- தென் மாவட்டங்களில் முக்கியமான விமான நிலையமாக மதுரை விமான நிலை யம் உள்ளது. இங்கிருந்து சென்னை, பெங்க ளூரு, மும்பை, தில்லி போன்ற உள் நாட்டு நகரங்களுக்கும், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட வெளி நாடு களுக்கும் விமான சேவை நடைபெற்று வரு கிறது. மதுரையில் இருந்து மும்பைக்கு தினமும் 2 தனியார் விமானங்கள் மூலம் பய ணிகள் சென்று வருகின்றனர். இந்தநிலையில் மதுரை விமான நிலை யத்தில் இருந்து ஒரு தனியார் விமானம் காலை 9 மணிக்கு மும்பை புறப்பட்டு சென் றது. அதுபோல் தினமும் பகல் 12 மணிக்கு மற்றொரு விமானம் மும்பை செல்வது வழக்கம். அந்த விமானத்தில் பயணம் செய் வதற்காக 180 பயணிகள் மதுரை விமான நிலையத்தில் காத்திருந்த னர். ஆனால் அவர்கள் செல்ல வேண்டிய விமானம் இயந்திரக் கோளாறு காரணமாக மும்பை யில் இருந்து வருவதில் தாமதம் ஏற்பட்டது. 2 மணிநேரத்தில் விமானம் வந்து, பய ணிகளை ஏற்றிசென்று விடும் என விமான நிறுவனம் அறிவித்தது. ஆனால் அந்த விமா னம் வரவில்லை, இதனால் அதில் செல்ல இருந்த பயணிகள் கோபமடைந்து, விமான நிறுவனத்தினரிடம் வாக்குவாதத்தில் ஈடு பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற் பட்டது. மேலும் அதில் பயணிக்கும் சிறுமி ஒரு வருக்கு மும்பையில் இருதய அறுவை
சிகிச்சை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டி ருப்பதும் தெரிய வந்தது. இதனால் சிறுமி யின் பெற்றோர் மிகுந்த மனவேதனை அடைந்தனர்.மேலும் விமானத்தில் பெண்கள், வயதானோர் அதிகம் இருந்த தால் பகல் 12 மணி முதல் இரவு வரை விமான நிலையத்தில் அமர வைக்கப்பட்ட தால் கடும் அவதியடைந்தனர். விமானம் தாமதம் தொடர்பான தகவல் அறிந்த மதுரை விமான நிலைய ஆலோ சனைக்குழு தலைவரும், விருதுநகர் எம். பி. யுமான மாணிக்கம்தாகூர், தனது டுவிட்டர் பக்கத்தில் மத்திய விமான துறை அமைச்சர் மற்றும் சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்தி டம் பயணிகளுக்கு மாற்று ஏற்பாட்டை விரைந்து செய்யும்படி வேண்டுகோள் விடுத்தார். இதனை தொடர்ந்து அந்த விமான நிறு வனம் பயணிகனை மாற்று விமானம் மூலம் மும்பைக்கு அழைத்துச்செல்வதாக உறுதி யளித்தது. அதன்படி இரவு 11.15 மணிக்கு மும்பையில் இருந்து வந்த பயணிகள் விமானம், 11.50-க்கு புறப்பட்டு சென்றது. மும்பை விமானம் சுமார் 12 மணி நேர தாமதத்தால் பயணிகள் சுமார் 12 நேரம் விமான நிலையத்தில் கடும் அவதி அடைந்த னர். இதேபோல சனிக்கிழமை காவை 11.30-க்கு மதுரையில் இருந்து துபாய்க்கு செல்ல இருந்த தனியார் விமானம் தொழில் நுட்பகோளாறு காரணமாக 3 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது குறிப்பி டத்தக்கது.