உயர் கல்வித்துறை அமைச்சர் முனைவர் கோ.வி.செழியன் மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசினர் மகளிர் கலைக் கல்லூரி கூட்டரங்கில் கல்லூரி ஆசிரியர்களுக்கான புது கலந்தாய்வு இடம் மாறுதலுக்கான ஆணைகளை வழங்கினார். உடன் உயர் கல்வித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மரு. கே.கோபால், தொழில்நுட்ப கல்வி ஆணையர் ஆபிரகாம், கல்லூரி கல்வி ஆணையர் சுந்தரவல்லி, மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் மு.பூமிநாதன், மாநகராட்சி துணை மேயர் தி.நாகராஜன் ஆகியோர் இருந்தனர்.