பட்டாசு ஆலை விபத்து: உரிமையாளர் கைது
சாத்தூர், மே 5- சாத்தூர் அருகே பட்டாசு ஆலை விபத்து தொடர்பாக உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்தனர். சாத்தூர் அருகே உள்ளது கத்தா ளம்பட்டி. இங்கு தனியாருக்கு சொந்த மான பட்டாசு ஆலை உள்ளது. இதில், மே 4 அன்று ஏற்பட்ட விபத்தில் தொழி லாளி ஒருவர் உயிரிழந்தார். இதுகுறித்து அம்மாபட்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், ஆலை உரிமையா ளர் சிதம்பரம் என்பரை காவல்துறை யினர் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள 3 பேரை தேடி வருகின்றனர்.
இரு சக்கர வாகனம் மோதி முதியவர் பலி
விருதுநகர், மே 5- விருதுநகர் ஜக்கம்மாள் புரத்தைச் சேர்ந்தவர் மகாலிங்கம் (70). இவர் வேலை செய்து வந்தார். இந்நிலையில், பூங்கா அருகே சென்ற போது இரு சக்கர வாகனம் மோதியது. இதில் படு காயமடைந்த அவர், விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப் பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து, பாண்டியராஜ் என்ப வர் கொடுத்த புகாரின் பேரில் கிழக்கு காவல் நிலையத்தினர் வழக்குப் பதிவு செய்து இரு சக்கர வாகன ஓட்டுநர் மகேந்திரன் என்பவரை பிடித்து விசா ரித்து வருகின்றனர்.
மனைவியை கொலை செய்த கணவர் கைது
தேனி, மே 5- தேனி அருகே மகளிர் காவல் நிலை யத்தில் புகார் கொடுத்த மனைவியை கொலை செய்த கணவரை காவல்துறை யினர் கைது செய்தனர். தேனி ஒன்றியம் குப்பிநாயக்கன்பட்டி கிழக்குத் தெருவைச் சேர்ந்த தம்பதியர் லட்சுமணன்-ராஜாத்தி (50). லட்சுமணன் வேறு பெண்ணுடன் பழகி வந்ததுடன் குடும்பத்தையும் கவனிக்காமல் இருந்து வந்துள்ளதால் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. இதுகுறித்து தேனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ராஜாத்தி புகார் கொடுத்தார். இதனால் கோபம டைந்த லட்சுமணன், மனைவி ராஜாத்தி யை அரிவாளால் தாக்கி, சேலையால் கழுத்தை இறுக்கி கொலை செய்தார். இதுகுறித்து கண்டமனூர் காவல்துறை யினர் வழக்குப்பதிவு செய்து லட்சு மணனை கைது செய்தனர்.
சேலையில் தீப்பற்றி பெண் பலி
தேனி, மே 5- பெரியகுளம் அருகே விளக்கு ஏற்றும் போது சேலையில் தீ பற்றியதால் ஓய்வு பெற்ற பெண் பணியாளர் உயிரிழந்தார். தேனி மாவட்டம் தேவதானப்பட்டி சொர்ணம்பிள்ளை தெருவைச் சேர்ந்த பரமசிவம் என்பவரது மனைவி சிவகாமி (62). நீதிமன்றத்தில் தட்டச்சராக பணி புரிந்து ஓய்வு பெற்றவர். இவர் ஏப்ரல் 30-ஆம் தேதி வீட்டில் சுவாமி கும்பிடுவதற்காக விளக்கை ஏற்றியுள்ளார். அப்போது புடவையில் தீப்பற்றியது. அருகில் உள்ளவர்கள் இவரை தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில், புதனன்று சிகிச்சைப் பல னின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக தேவதானப்பட்டி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
பாம்பு கடித்து தொழிலாளி பலி
தேனி, மே 5- தேனி அருகே உப்பார்பட்டி கருப்ப சாமி கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாக்கியம் (57). கூலித் தொழிலாளி. இவர் பாலகுருநாதபுரத்தில் உள்ள தோட்டத்தில் கரும்பு வெட்டும் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது புதரில் இருந்த பாம்பு இவரை கடித்தது. தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத் துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
திண்டுக்கல் மாநகராட்சியில் மின் விளக்குகள் பராமரிப்பு தனியார் வசமாகிறதா?
திண்டுக்கல், மே 5- திண்டுக்கல் மாநகராட்சியில் மின் விளக்குகள் பராமரிப்பு பணி தனியார் வசம் ஒப்படைக்கப்படவுள்ளதாக பரபரப்பு நிலவு கிறது. ஏற்கனவே திண்டுக்கல் மாநகராட்சி யில் துப்புரவு பணி தனியார் வசம் ஒப்ப டைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நக ரம் துப்புரவாக இருக்கிறதோ இல்லையோ, ஒப்பந்தகாரர்களுக்கு முறையாக பணம் சென்றடைகிறது. திண்டுக்கல் மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளுக்கு தேவையான மின் விளக்கு கள் கையிருப்பு இல்லை. இதனால் சில வார்டுகளில் மாமன்ற உறுப்பினர்களே தங்கள் சொந்த செலவில் மின் விளக்கு களை வாங்கி பொருத்தி உள்ளனர். ரூ.450 மதிப்புள்ள எல்.இ.டி. குமிழ் விளக்குகளையும், ரூ.215 மதிப்புள்ள எல்.இ.டி. குழல் விளக்குகளையும் வாங்கி பொருத்தியுள்ளனர். மாநகராட்சி மின் விளக்கு பராமரிப்பு பிரிவில் கண்காணிப்பா ளராக இருந்த கதிரேசன் என்பவர் கொரோனா காலத்தில் காலமானதால் அவருக்கு பதிலாக இன்னும் யாரையும் நிய மிக்கவில்லை. உதவி பொறியாளராக உள்ள கூடுதல் பணியாக கண்காணிப்பாளர் பணியையும் ஏற்று செயல்படுகிறார். இதனால் அவருக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டுள்ளது. மேலும் 48 வார்டுகளுக்கு 4 மின் விளக்கு பராமரிப்பாளர்களே உள்ளனர். இவர் களால் பணி செய்ய இயலாத நிலை உள் ளது. இந்நிலையில் மின்விளக்கு பராமரிப்பு பணியை தனியார் வசம் ஒப்படைக்க மாநக ராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தெரி கிறது.
தேனியில் கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பு ஆய்வாளர், 3 காவலர்கள் மீது நடவடிக்கை
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவு
தேனி, மே 5- தேனி அருகே கஞ்சா வியாபாரிகளிடம் தொடர்பில் இருந்த தேனி அல்லிநகரம் காவல் ஆய்வாளர் ராஜேஷ் கண்ணன் மற் றும் 3 காவலர்களை கட்டுப்பாட்டு அறைக்கு இடமாற்றம் செய்து தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே உத்தரவிட்டுள்ளார். கஞ்சா மொத்த விற்பனையில் தென் மாநிலங்களின் தலைநகராக தேனி மாவட்டம் விளங்கி வருகிறது. வெளி மாநி லங்களில் இருந்து கொள்முதல் செய்யப் பட்ட கஞ்சாவை தரம் பிரித்து தமிழகத்தில் பல மாவட்டங்களுக்கும், அண்டை மாநில மான கேரளாவிற்கும் பிரித்து விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஒரு மாதமாக முதல்வரின் உத்தரவுப்படி தமிழகத்தில் கஞ்சா சோதனை நடத்தப்பட்டு கைது, பறிமுதல் நடவடிக்கை தொடர்ந்து வரு கிறது. இந்நிலையில், இதனை பயன்படுத்தி தேனி அல்லிநகரம் காவல் நிலைய ஆய்வாளர் பலி வாங்கும் செயலில் ஈடு பட்டுள்ளார். தேனி அருகே சத்திரப்பட்டி கிரா மத்தில் கஞ்சா வியாபாரி ஒருவரை பலி வாங்கும் நோக்கில் மற்றொரு கஞ்சா வியா பாரியிடம் ஒன்றரை கிலோ கஞ்சா வாங்கி வைக்குமாறு கூறியுள்ளார். அந்த கஞ்சா வியாபாரியும் கஞ்சாவை வாங்கி வைத்துள்ளார். காவல்துறையினர் நடத்திய சோதனையில் கஞ்சா பறிமுதல் செய்யப்படுகிறது. விசாரணையில் கஞ்சா வாங்கி வைக்க சொன்னது காவல் ஆய்வா ளர் ராஜேஷ் கண்ணன் என்பது தெரிய வந்தது. இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே விசாரணை நடத்தினார். விசா ரணையில் இது உறுதிப்படுத்தப்பட்டது. முதல் கட்ட நடவடிக்கையாக தேனி அல்லி நகரம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஷ் கண்ணன், காவலர்கள் ராஜா, ஸ்ரீதர், வாலி ராஜன் ஆகியோரை கட்டுப்பாட்டு அறைக்கு உடனடியாக மாற்றி காவல் கண்காணிப்பா ளர் உத்தரவிட்டார்.
சிறுமியை திருமணம் செய்தவர் கைது
திருவில்லிபுத்தூர், மே 5- வத்திராயிருப்பு மேலப்பாளையம் தெற்கு தெருவில் வசிப்பவர் சின் னையா மகன் செந்தில்குமார். இவர் தேங்காய் வெட்டும் தொழில் செய்து வருகிறார். இவர் சிவகாசி அருகே உள்ள ஒரு ஊரில் வசிக்கும் 17 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்து கர்ப்ப மாக்கியுள்ளார். இந்த நிலையில் அந்தச் சிறுமி விருதுநகர் அரசு மருத்துவ மனைக்கு பரிசோதனைக்கு சென்ற பொழுது அந்த சிறுமிக்கு 18 வயது பூர்த்தி யாகவில்லை என்ற விவரம் தெரிய வந்தது. இதுகுறித்து மருத்துவ நிர்வாகம் விருதுநகர் மாவட்ட சமூக நலத் துறைக்கு புகார் செய்ததன் பேரில் வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றிய சமூக நலத்துறை விரி வாக்க அலுவலர் மல்லிகா இதுகுறித்து திருவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதன்பேரில், காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து செந்தில்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.
வங்கி உதவி மேலாளரை தாக்கி பணம் கொள்ளை
தேனி, மே 5- பெரியகுளம் அருகே வங்கி உதவி மேலாளரை தாக்கி பணம், செல்போன் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்ற இரண்டு வாலிபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர். பெரியகுளம் அருகே ஜெயமங்கலம் அங்காளம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முருகன் (27). இவர் சில்வார் பட்டியில் உள்ள வங்கியில் உதவி மேலா ளராக பணிபுரிந்து வருகிறார். புதன் கிழமை காலை இவரது வீட்டில் புகுந்த இரண்டு பேர் இவரை கடுமையாகத் தாக்கி ரூ.17 ஆயிரத்து 500, மொபைல், ஏடிஎம்.கார்டு ஆகியவற்றை கொள்ளை யடித்தனர். பின்னர் இவரை நிர்வாண மாக வீடியோ எடுத்து கொள்ளை யடித்ததை வெளியில் கூறினால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டிச் சென்றனர். புகாரின் பேரில் ஜெயமங்கலம் காவல்துறையினர் இதே ஊரைச் சேர்ந்த சூரியபிரகாஷ் (21), சிந்துவம்பட்டியைச் சேர்ந்த ரமேஷ்(32) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்ற னர்.
பேருந்தில் பெண்ணிடம் நகை திருட்டு
தேனி, மே 5- ஆண்டிபட்டி அருகே ஓடும் பேருந் தில் பெண்ணிடம் நகை திருடியதாக ஆண்டிபட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆண்டிபட்டி தாலுகா கண்டமனூர் அருகே உள்ள பொன்னம்மாள்பட்டி கிரா மத்தை சேர்ந்த செல்வக்குமார் என்பவ ரின் மனைவி சுப்புத்தாய். இவர் கடந்த 3-ஆம் தேதி அவரது அண்ணன் வசித்து வரும் பேரையூர் அருகே உள்ள அத்திப்பட்டி கிராமத்தில் நடைபெறும் திருவிழாவிற்கு செல்வதற்காக, அவரது ஏழரை பவுன் தங்க நகையை அவரது பர்சில் வைத்துக்கொண்டு, துணிகளை யும் பையில் வைத்துக்கொண்டு சென் றுள்ளதாக தெரிகிறது. பொன்னம்மாள்பட்டி கிராமத்தில் இருந்து பேருந்தில், க.விலக்கு மருத்து வமனை பேருந்து நிறுத்தத்திற்கு வந்துள்ளார். அங்கிருந்து உசிலம்பட்டி செல்லும் தனியார் பேருந்தில் ஏறி யுள்ளார். பேருந்து கிளம்பியவுடன் டிக் கெட் எடுப்பதற்காக அவரது பர்சை திறந்து பார்த்துள்ளார். அப்போது அவர் வைத்திருந்த ஏழரை பவுன் தங்க நகை மற்றும் செல்போன் காணாமல் போனது தெரியவந்தது. அக் கம்பக்கத்தில் தேடி பார்த்தும் கிடைக்கா ததால் நகை திருடுபோனது தெரிய வந்தது. உடனே அவர் தனியார் பேருந்து நடத்துநரிடம் தெரிவித்து, க.விலக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரயில்வே தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பயணத்திற்கு அனுமதியளித்திடுக! டிஆர்இயு கோரிக்கை
மதுரை, மே 5- தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் (டிஆர்இயு) மதுரை கோட்ட இணைச் செயலாளர் ரா.சங்கரநாராயணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ரயில்வே வாரிய தேர்வுகளை அந்தந்த விண்ணப்பதா ரர்களின் ஊர்களிலோ அல்லது அந்தந்த மாநிலங்களிலோ நடத்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், அதனை புறக்கணித்து ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும் என திசைதிருப்புகிறார்கள். தேர்வு மையங்களை மாற்றாமல் ரயிலில் கூடுதல் பெட்டி கள் இணைக்கிறோம் என்பது தீர்வல்ல. தற்போது வேலை யில்லா காரணத்தால் பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் நேரத்தில் இளைஞர்களுக்கு ரயில் கட்டணம் இலவசம் என அறிவித்திருக்க வேண்டும். மேலும் முன்பதிவில் அவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். எனவே ரயில்வே வாரியம் தேர்வு எழுதும் இளைஞர் களுக்கு அவர்களின் நுழைவுச் சீட்டை அடிப்படையாக வைத்து இலவச பயணம் செய்ய அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
அரசு நிலம் அபகரிப்பு தேனியில் துணை வட்டாட்சியர் உட்பட 3 பேர் கைது
தேனி, மே 5- தேனியில் அரசு நிலங்கள் அபகரிக்கப்பட்ட மெகா மோசடி வழக்கில் துணை வட்டாட்சியர் மோகன்ராம் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். தேனி மாவட்டத்தில் பெரியகுளம் தாலுகாவில் உள்ள 182 ஏக்கர் அரசு நிலங்கள், பட்டா மாறுதல் நிலமோசடி தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்ற னர். இதில் அதிமுக பிரமுகரான முன்னாள் பெரியகுளம் ஒன்றிய செயலாளர் அன்னப்பிரகாஷ், நில அளவையர் பிச்சை மணி, பெரியகுளம் கோட்டாட்சியர் அலுவலக உதவியாளர் அழகர் ஆகியோரை சிபிசிஐடி போலீசார் கைது செய்த னர். இந்த வழக்கில் தொடர்புடைய பெரியகுளம் துணை வட்டாட்சியர் மோகன்ராம்,தேவதானப்பட்டி பிர்க்கா சர்வே யர் சக்திவேல்,அரசு சாரா உதவியாளர் செல்வராஜ் ஆகி யோரை வியாழனன்று சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்தனர்.
பெரியகுளத்தில் கல்வி கட்டணம் செலுத்தாத மாணவர்களை தேர்வு எழுத அனுமதி மறுப்பு தனியார் பள்ளி நிர்வாகத்தை கண்டித்து பெற்றோர்கள் போராட்டம்
தேனி, மே 5- பெரியகுளத்தில் கல்விக் கட்டணம் கட்டாத 50க்கும் மேற்பட்ட மாணவர்களை தேர்வு எழுத அனுமதிக்காத தனியார் பள்ளி நிர்வாகத்தை கண்டித்து பள்ளி வாயில் முன்பு பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே இயங்கிவரும் சென்டான்ஸ் ஜெ.சி மெட்ரிகுலேஷன் என்ற தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் 50க்கும் மேற்பட்ட மாணவர்களை கல்வி கட்டணம் கட்டாததால் ஆண்டு தேர்வை எழுத அனுமதிக்காமல் நிறுத்தி வைத்துள்ளதாக கூறி மாணவர்களின் பெற்றோர்கள் தனியார் பள்ளி முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தனியார் பள்ளி நிர்வாகம் கல்வி கட்டணம் செலுத்தாத மாணவர்களை வகுப்பறைகளில் தரையில் அமர்த்தி உட்கார வைப்பதாகவும், ஆண்டு பொதுத்தேர்வில் கல்வி கட்டணம் செலுத்தாத மாணவர்கள் தேர்வு எழுதியபோது பாதியிலேயே தேர்வுத் தாள்களை பறித்துக் கொண்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் தேர்வு எழுத சென்ற மாணவர்கள் அனைவரையும் தேர்வு எழுதவிடாமல் நிறுத்தி வைத்ததாகவும் இதில் பெற்றோர்கள் செலுத்த வேண்டிய தொகையை தேர்வு முடிவுகள் செலுத்துகிறேன் என்று கூறியும் பள்ளி நிர்வாகம் அதற்கு சம்மதிக்கவில்லை. தொடர்ந்து பள்ளி கட்டணத்தை செலுத்தினால் மட்டுமே தேர்வு எழுத அனுமதிப்போம் என்றும் இல்லையென்றால் உங்கள் குழந்தைகளை பள்ளியில் இருந்து கூட்டிச் செல்லுங்கள் என்று கூறியதாக கூறப்படுகிறது. இதனால் ஆவேசமடைந்த பெற்றோர், பள்ளி வளாகத்திற்கு முன்பு நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இது போன்ற நிர்வாகத்தின் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.