மதுராந்தகம்,செப்.10- செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் அருகே உள்ள பழவூரில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. சனிக்கிழமை இரவு விற்பனை முடிந்த தும் ஊழியர்கள் மதுக்கடையை பூட்டிச் சென்றனர். இந்த நிலையில் ஞாயிறன்று அதி காலை மதுக்கடையின் பின்பக்க சுவரில் துளை போடப்பட்டு இருப்பதை கண்டு அவ் வழியே சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்த னர். மேலும் மதுபாட்டில்களும் உடைக்கப் பட்டு சிதறி கிடந்தன. பெட்டியுடன் மது பாட்டில்களும் கிடந்தது. இதுபற்றி அறிந்ததும் சித்தாமூர் காவல்துறையினர் வந்து விசாரணை நடத்தி னர். நள்ளிரவு வந்த மர்ம கும்பல் மதுக்கடை யின் பின்பக்க சுவரில் துளை போட்டு புகுந்து பெட்டி, பெட்டியாக மது பாட்டில்களை அள்ளிச்சென்று இருப்பது தெரியவந்தது. வெளியே எடுத்து வந்த சில மதுபாட்டில்களை கொண்டு செல்ல முடியா ததால் கொள்ளை கும்பல் அதனை அங்கேயே உடைத்தும் பெட்டியுடன் மது பாட்டிலை விட்டும் சென்றுள்ளனர். கடை யின் உள்ளே இருந்த லாக்கரில் 2 நாட்கள் விற்பனை பணம் ரூ.3 லட்சம் இருந்தது. அந்த லாக்கரை கொள்ளை கும்ப லால் உடைக்க முடியாததால் மதுபாட்டில் களை மட்டும் அள்ளிச்சென்றனர். இதனால் அங்கிருந்த ரூ.3 லட்சம் தப்பியது. இது குறித்து சித்தாமூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து கொள்ளை கும்பல் குறித்து தீவிர விசாரணை நடத்தி வரு கின்றனர்.