districts

பசுமையான இராமநாதபுரத்தை உருவாக்குவோம்

இராமநாதபுரம், ஏப்.3- தமிழ்நாடு பசுமை இயக்கம் திட் டத்தில் இராம நாதபுரம் மாவட்டத்தில் ஒரு கோடி மரக்கன்றுகள்  நடவு செய்யும் பணிகளை பார்வையிட்டு அதிக  அளவு மரக்கன்றுகள் உற்பத்தி செய்திட வேளா ண்மைத்துறைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் உத்தரவிட்டார். இராமநாதபுரம் ஒன்றியம், தேவிப்பட்டினம் ஊராட்சியில் வேளாண்மைத்துறையின் மூலம் நாற்றங்கால் பண்ணை செயல்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் நாற்  றாங்கால் பண்ணையில் தென்னை மற்றும் பல்வேறு வகை மரக்கன்றுகளை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்கப்படுவதை பார்வை யிட்டு தெரிவிக்கையில், வேளாண்மைத்துறை யின் மூலம் 6 ஹெக்டேர் பரப்பளவில் நாற்றங்கால் பண்ணை அமைத்து விவசாயிகளுக்கு தேவை யான மரக்கன்றுகள் வழங்கப்பட்டு வருகின்றன.  அந்த வகையில் தற்பொழுது நெட்டை மற்றும்  குட்டை ரக தென்னை நாற்றுகள் வளர்ந்து கலை ஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளா ண்மை வளர்ச்சி திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு மானிய திட்டத்தில் கன்றுகள் வழங்கப்பட்டு வருகிறது.விவசாயிகள் தேவை யான தென்னங்கன்றுகளை வாங்கி பயன்பெற லாம். தமிழ்நாடு பசுமை இயக்கம் திட்டத்தின் மூலம் இராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் ஒரு கோடி மரக்கன்றுகள் நடவுசெய்து  ‘பசுமை இராமநாதபுரம்” உருவாக்க திட்டமிடப்  பட்டுள்ளது. அதனடிப்படையில் தற்பொழுது வேளாண்மைத்துறையின் மூலம் நாற்றங்கால் பண்ணைகளில் மரக்கன்றுகள் வளர்க்கப்படு கின்றன.

இதில் மகோகனி, வில்வம், கொடுக்கா புளி, செம்மரம், சீதா, வன்னி, வாதம், மஞ்சள் கொன்னடி என பல்வேறு மரக்கன்றுகள் வளர்க்கப்படுகின்றன.. இவ்வாறு வளர்க்கப்படும் மரக்கன்றுகளை ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் 25 இலட்சம் கன்றுகளும், பள்ளிக்கல்வித்துறையின் மூலம்  10 லட்சம் கன்றுகளும், மகளிர் சுய உதவிக்குழு மூலம் 10 இலட்சம் கன்றுகளும், வனத்துறையின் மூலம் 25 இலட்சம் கன்றுகளும் என பல்வேறு  துறைகள் மூலம் ஒருங்கிணைந்து நடப்பாண்டில் ஒரு கோடி மரக்கன்றுகள் மாவட்டத்தில் நடவு  செய்யப்படுகின்றன. நடவு செய்வது மட்டுமின்றி  5 ஆண்டுகளுக்கு பராமரிக்கும் வகையில் திட்ட மிடப்பட்டுள்ளது. ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் ஊராட்சி மன்றத் தலைவர்கள் தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்கள் மூலம் பராமரித்தல் அதேபோல் பள்ளிக் கல்வித்துறை யின் மூலம் பராமரித்தல் என இவ்வாறு திட்டமிட்டு இப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு பசுமை இராமநாத புரம் என்ற நிலையை உருவாக்க வேண்டும் என  மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் தெரி வித்தார். இந்த ஆய்வில் வேளாண்மைத்துறை இணை இயக்குநர் சரஸ்வதி, தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் நாகராஜன் , மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) தனுஷ்கோடி உட்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.