districts

img

ஆண்டிபட்டி அருங்காட்சியகத்தில் நிலாச்சோறு வெண்கலக் கும்பா

தேனி, மார்ச் 7- ஆண்டிபட்டி அருங்காட்சி யகத்தில் நிலாச்சோறு வெண்கலக் கும்பா காட்சிக்கு வைக்கப்பட்டுள் ளது. ஆண்டிபட்டி அருங்காட்சிய கத்தில் மாதம் தோறும் ஒரு அரிய பொருள் காட்சிப்படுத்தப்பட்டு அதன் சிறப்புகள் குறித்து விளக் கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இம்மாதத் திற்கு வெண்கலக் கும்பா பார் வைக்கு வைக்கப்பட்டுள்ளது. வெண்கலம் என்பது செம்பும், வெள்ளீயமும் கலந்த உலோகமா கும். இதில் உணவு சமைக்கும் போது அதற்குரிய சத்துக்கள் உணவில் சேர்கின்றன. இதை அறிந்தே முன்னோர்கள் இதனை அதிகளவில் பயன்படுத்தி வந்த னர். இது குறித்து அருங்காட்சியக காப்பாட்சியர் சே.கிருஷ்ணம்மாள் கூறுகையில், கூட்டுக் குடும்பமாக வாழ்ந்த காலத்தில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து வெண்கலக் கும்பாவில் சாதத்தை பிசைந்து பின்பு சிறிய கும்பாக்களில் தொடு கறியுடன் உருண்டை பிடித்து அனைவருக்கும் வழங்குவர். நிலாச் சோறு இவ்வகையில் உண் ணும் பழக்கம் பரவலாக இருந்தது. சிலர் கூழை வெங்காயம், பச்சை மிளகாயுடன் கலந்தும் குடிப்பர். வெண்கலப் பாத்திரத்தைத் தொட ர்ந்து பயன்படுத்தி வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இத னால் அக்காலத்தில் இதன்பயன் பாடு அதிகம் இருந்தது என்றார்.