பத்தனம்திட்டா, ஏப்.30- இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தின் கேரள மாநில 15-ஆவது மாநாடு பத்த னம்திட்டாவில் சனிக்கிழமை யன்று (ஏப்.30) எழுச்சிமிகு பேரணி - பொதுக்கூட்டத்து டன் நிறைவடைந்தது. இதில், மாநிலத் தலைவராக வி.வசீப், செயலாளராக வி. கே.சனோஜ், பொருளாள ராக அருண்பாபு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சனிக்கிழமையன்று மாலை பகத்சிங் நகரில் (பத்த னம்திட்டா நகராட்சி மைதா னம்) நடைபெற்ற பொதுக் கூட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் தொடங்கி வைத்தார். நகரின் மூன்று மையங்களில் இருந்து சிறிய பேரணிகள் மாநாட்டு நகரை வந்தடைந்தன. அமைச்சர் கள் சஜி செரியன், பி.ஏ.முக மது ரியாஸ், வீணா ஜார்ஜ், டிஒய்எப்ஐ அகில இந்திய தலைவர் ஏ.ஏ.ரஹீம் உள்ளிட் டோர் பேசினர்.