நாகர்கோவில், ஜூன் 26- கன்னியாகுமரியில் ஞாயிறு அதிகாலையில் இருந்து பலத்த சூறைக்காற்று வீசியதால் கடல் சீற்றமாக இருந்தது. அதைத்தொடர்ந்து கடலில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வரு கிறார்கள். அதிலும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருக்கும். அதே போல் நேற்று காலையில் கன்னியாகுமரிக்கு சுற் றுலா பயணிகள் வந்து இருந்தனர். ஆனால் கடலில் ஞாயிற்றுகிழமை அதிகாலையில் இருந்தே பலத்த சூறைக்காற்று வீசியது. இதனால் கடல் சீற்றமாக காணப்பட்டது. குளிக்க தடை அதைத்தொடர்ந்து முக்கடல் சங்கமத்தில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி குளிக்க போலீசார் தடை விதித்தனர். மேலும் கடற்கரை பகுதியில் காவலர்கள் மற்றும் கடலோர குழும காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடு பட்டனர். கடல் சீற்றமாக காணப்பட்ட போதும், பூம்புகார் போக்குவரத்து கழகம் சார்பில் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு வழக்கம் போல் படகுகள் இயக்கப் பட்டன.