districts

img

பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கல்

கடமலைக்குண்டு, செப்.1- கடமலை - மயிலை ஊரா ட்சிக்குட்பட்ட குமணந் தொழு அரசு மேல்நிலைப் பள்ளி பிளஸ்1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற் றது. விழாவிற்கு பள்ளி தலை மை ஆசிரியர் மாதவன் தலைமை வகித்தார். ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கி னார். மேலும் பள்ளி மாணவ -மாணவிகளுக்காக அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் தொடர் பாக பேசினார்.  இதில் ஒன்றிய கழக செயலாளர்கள் வழக்கறிஞர் சுப்பிரமணி, தங்கப்பாண்டி, ஒன்றிய குழு தலைவர் சித்ரா சுரேஸ், ஒன்றிய கவுன்சிலர்கள் பிரபாகரன், மச்சக்காளை, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் மாட சாமி, மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் மாடசாமி, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் ஜெயச்சந்திரன், முன்னாள் ஒன்றிய இளைஞரணி அமை ப்பாளர் தமிழன் மற்றும் ஆசிரியர்கள் மாணவ, மாணவியர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.