நத்தம். ஏப்.22- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சொறிப்பாறை பட்டி- சங்கரன்பாறையில் முத்துமாரியம்மன், பாலமுருகன் கோவில் திரு விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடைபெற்றது. ஜல்லிக்கட்டு போட்டியை வருவாய் கோட்டாட்சியர் பிரேம்குமார், தாசில்தார் சுகந்தி ஆகியோர் கொடி யசைத்து தொடங்கி வைத்த னர். திண்டுக்கல்,திருச்சி, புதுக்கோட்டை,தேனி, மதுரை உள்ளிட்ட மாவட் டங்களிலிருந்து 508 காளை களும், 300 மாடுபிடிவீரர்க ளும் கலந்து கொண்டனர். காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் பிடிபடாத காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. டி.எஸ்பி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபட்டி ருந்தனர். இதில் காளைகள் முட்டி யதில் மாடுபிடி வீரர்கள் 8 பேர் உள்பட 14 பேர் காய மடைந்தனர். 7 பேர் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.