திண்டுக்கல், ஜுலை 28- மாற்றுத்திறனாளிகளுக்கு கடன் வழங்கு வதில் இந்தியாவிலேயே தமிழகம் தான் முதலிடம் வகிக்கிறது என்று கூட்டுறவுத் துறை பதிவாளர் சண்முகசுந்தரம் தெரி வித்தார். கூட்டுறவுத்துறையின் சார்பில் தமிழ்நாடு கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையங்க ளில் பணியாற்றும் முதல்வர்கள், பேராசிரியர் கள், ஆகியோருக்கான 5 நாள் பயறிசி முகாம் திண்டுக்கல் காந்திகிராம பல்லைக்கழ கத்தின் ஜுப்ளி அரங்கத்தில் புதனன்று நடை பெற்றது. இதில் தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்க ளின் பதிவாளர் சண்முகசுந்தரம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மாவட்ட ஆட்சியர் விசாகன், திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கி மேலாளர் ராதாகிருஷ்ணன், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் காந்திநாதன், காந்திகிராம பல்கலைக்கழக பதிவாளர் முரளிதரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியையொட்டி கூட்டுறவு பதிவாளர் சண்முசுந்தரம் செய்தியாளர்க ளிடம் கூறியதாவது:
கூட்டுறவு சங்கங்களில் மாணவர்களை மிகுதியாக சேர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். கூட்டுறவு சங்கங்கள் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் எடுத்துச்செல்ல விளம்பரங்கள் மூலம் நடவடிக்கை எடுத்து வருகிறோம். தனியார் வங்கிகளோடு போட்டி போடக்கூடிய சூழ்நிலை ஏற் பட்டுள்ளது. தனியார் வங்கிகளில் முறைகேடு நடை பெறவில்லை என்று சொல்ல முடியாது. அதே போல தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும் முறைகேடு நடைபெறவில்லை என்று சொல்ல முடியாது. நிதி சார்ந்த துறைக ளில் அவ்வப்போது முறைகேடுகள் நடை பெறுகிறது. மோசடி செய்கிற சிந்தனை உள்ளவர்கள் எல்லா இடத்திலும் மோசடி செய்து கொண்டே இருப்பார்கள். நகைக்கடன்கள் வழங்கியதில் மோசடி செய்துள்ளதாக கூறுகிறார்கள். உதாரண மாக ரூ. 16 ஆயிரம் கோடி நகைக்கடன் கொடுத்துள்ளோம். இதில் ரூ.18 கோடி தான் முறைகேடு நடந்துள்ளது. இது ஒரு சத வீதத்திற்கும் கீழ் தான் நடந்துள்ளது. இந்த ரூ.18 கோடி கடன் முறைகேட்டை வைத்துக் கொண்டு கூட்டுறவு சங்கம் என்றாலே முறை கேடு தான் என்ற தவறான அபிப்ராயம் உரு வாக்கப்பட்டு வருகிறது. ஆனால் நாங்கள் கொடுத்த கடன் ரூ.16 ஆயிரம் கோடி.
கூட்டுறவு சங்கத்தில் நெட் பேங்கிங்
இதில் 5869 நிறுவனங்கள் நகைக்கடன் கொடுத்துள்ளன. நம்மிடம் முறைகேடு செய்த நிறுவனங்கள் 17 தான். பயிர்க்கட னில் விதி மீறல்கள் நடந்துள்ளன. அதை முறைகேடு என்று சொல்ல முடியாது. முதன் முறையாக மாநிலம் முழுவதற்கும் ஒரே மாதிரியான பயிர்க்கடன் வழங்குவது தொ டர்பாக வழிமுறைகள் வகுத்துக்கொடுக்கப் பட்டுள்ளன. அதில் நடைமுறை சிக்கல்கள் தான். அதை முறைகேடு என்று சொல்ல முடி யாது விதி மீறல் என்று தான் சொல்ல வேண்டும். இந்த விதிமுறை மீறலை தடுப்ப தற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரு கிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ள 4453 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்களை கணினிமயமாக்கும் நடவ டிக்கையை எடுத்து வருகிறோம். பல ஆண்டு களாக பேசி வந்ததை இப்போது தான் நடைமுறைப்படுத்தி வருகிறோம். ஓன்றிய அரசும் கணினிமயமாக்கும் நடவடிக்கையை எடுத்து வருகிறது. இந்த பணி 2027 ஆம் ஆண்டு தான் நிறைவு பெறும்.ஒன்றிய அரசு இரண்டில் ஒரு பங்கு கூட்டுறவு சங்கங்க ளைத்தான் கணினி மயமாக்குகிறது. ஆனால் தமிழக அரசு 4453 கூட்டுறவு சங்கங்க ளை கணினிமயப்படுத்துகிறோம். நெட் பேங்கிங் கொண்டு வர உள்ளோம். மத்தியப் படுத்தப்பட்ட விஜிலென்ஸ் மற்றும் கண்கா ணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள உள்ளோம். அதன் மூலம் முறைகேடுகளை, விதிமுறைகளை கட்டுப்படுத்த அனைத்து ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகின்றன.
காலிப்பணியிடங்களை நிரப்ப விரைவில் அரசாணை
கூட்டுறவுத் துறையில் 2 விதமான காலிப்பணியிடங்கள் உள்ளன. பேங்கிங் நிறுவனத்தில உள்ள காலிப்பணியிடங் கள் கடந்த வருடத்தில் பூர்த்தி செய்யப் பட்டுவிட்டன. நியாயவிலைக்கடைகளில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணி யிடங்கள் உள்ளன. இந்த காலிப்பணியி டங்கள் நிரப்பப்படும் என்று கடந்த சட்ட மன்ற கூட்டத்தொடரில் அமைச்சர் அறிவித்தி ருந்தார். அது தொடர்பாக விவாதம் நடந்து வருகிறது. இந்த வாரம் அல்லது அடுத்த வாரம் காலிப்பணியிடங்கள் நிரப்புவது தொடர்பான அரசாணை வெளியிடப்படும். கடைநிலை ஊழியர்கள் பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன. கூட்டுறவு வங்கிக ளில் ரூ.65 ஆயிரம் கோடி வரை மக்களது டெபாசிட் தொகை உள்ளன. இதனை மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருகி றோம். ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகள் அடிப்படை விதியின்படி 22 சதவீதம் கடனாக கொடுக்க முடியாது. வைப்புத்தொகையாக வைக்க வேண்டும். மீதமுள்ள 48 ஆயிரம் கோடிக்கு கடன் கொடுக்கிறோம். கடந்த முறை பயிர்க்கடன் அளவு 10 ஆயிரம் கோடியை தாண்டி உள்ளது. தமிழ்நாடு கூட்டுறவுத்துறை வரலாற்றில் முதன்முறையாக அதிகபட்சமான கடன் தொகை வழங்கியிருக்கிறோம். பயிர்க் கடன் கொடுக்கக்கூடிய அளவையும், பயிர்க் கடன் பெறும் விவசாயிகளின் எண்ணிக்கை யையும் அதிகரிக்கும் நடவடிக்கையை எடுத்து வருகிறோம்.
கடந்த ஆண்டுக்கு முந்தைய ஆண்டு ரூ. 43 ஆயிரம் கோடி நகைக்கடன் கொடுத்துள் ளோம். கடந்த ஆண்டு ரூ.32 ஆயிரம் கோடிக்கு நகைக்கடன் கொடுத்துள்ளோம். இந்த ஆண்டு ரூ.37 ஆயிரம் கோடிக்கு மேல் வழங்க வாய்ப்புள்ளது. அதே போல மகளிர் சுயஉதவிக்குழு கடன் லாபம் தரக்கூடியது. ரூ.2785 கோடி தள்ளுபடி செய்துள்ளோம். மகளிர் சுயஉதவிக்குழு கடனையும் நாங்கள் உயர்த்துவதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறோம். மாற்றுத்திறனாளிகளுக்கு கடன் வழங்குவதில் நமது கூட்டுறவு சங்கங்கள் இந்திய அளவில் தொடர்ந்து 4 ஆண்டு களாக முதலிடம் வகிக்கிறது. அதற்காக ஒன்றிய அரசின் விருதை பெற்று வருகி றோம். பல்வேறு வகையான பொதுமக்களு க்கு 17 வகையான கூட்டுறவு கடன்களை வழங்கி வருகிறோம். மத்திய கூட்டுறவு வங்கிகளில் நெட் பேங்கிங் இல்லை. ஆனால் மொபைல் பேங்கிங் உள்ளது. ஜுலை 31 ஆம்தேதிக்குள் நெட்பேங்கிங் வசதிகளை கொண்டு வர நடவடிக்கை எடுத்துவருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். (நநி)