districts

img

மல்லாங்கிணறு பேரூராட்சியில் தீவிர வாக்கு சேகரிப்பு

காரியாபட்டி, பிப்.15- விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணறு பேரூராட்சிக்கு உட்பட்ட 9 வது வார்டில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  சார்பில் ப.சுதா போட்டியிடுகிறார். அப்பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பு நடைபெற்றது. இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.முத்துக் குமார், வி.முருகன், மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.பூங் கோதை, வட்ட செயலாளர் ஏ. அம்மாசி, சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் எம்.சாராள் உட்பட பலர் பங்கேற்றனர்.

எல்ஐசியின் பங்குகளை விற்கும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து செவ்வாயன்று இராமநாதபுரம் எல்ஐசி  கிளை அலுவலகம் முன்பாக முதல் நிலை அதிகாரிகள், வளர்ச்சி அதிகாரிகள் ,காப்பீட்டு கழகத்தைச் சேர்ந்த அலுவலக ஊழியர்கள் என கூட்டு போராட்ட குழு சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்க நிர்வாகிகள் ஈஸ்வரன் , மணிகண்டன் அவர்களும், முத்துப்பாண்டி ஆகியோர் பேசினர்.