districts

மதுரை விரைவு செய்திகள்

எஸ்.பி.கே நிறுவன உரிமையாளர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை

அருப்புக்கோட்டை, ஜூலை 6- அருப்புக்கோட்டை மதுரை சாலையில் நெடுஞ் சாலை மற்றும் பொதுப்பணித்துறை ஒப்பந்தக்காரர் செய்யாதுரை மற்றும் அவரது மகன்களுக்கு சொந்த மான வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்துறை  அதிகாரிகள் ஜூலை 6 அன்று திடீர் சோதனை நடத்தி னர். விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் செய்யாதுரை. இவர் கடந்த அதிமுக ஆட்சி யின் போது நெடுஞ்சாலைத்துறையில் ஒப்பந்தங்களை எடுத்து பல்வேறு பணிகளைச் செய்து வந்தார். அப்போது, அவரது வீடுகள் மற்றும் வாகனங்களில் சோதனையிட்ட போது, கணக்கில் வராத பல கோடி ரூபாய் ரொக்கப் பணம் மற்றும் தங்க நகைகள் கைப்பற்றப்பட்டன. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்க மானவர் செய்யாதுரை எனக் கூறப்பட்டு வந்த நிலையில்,  அவரது வீடுகள் மற்றும் அலுவலகங்களில் கடந்த 2018 ம்  ஆண்டு ஜூலை மாதம் சோதனை நடைபெற்றது. இந்நிலையில், புதன் கிழமை மதியம் அருப்புக் கோட்டையில் உள்ள அனந்தபுரி நகரில் உள்ள அவரது  வீடு, குடும்பத்தினரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மதுரையிலிருந்து வந்த 10 க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இரவு 7 மணிவரை இச்சோதனையானது தொடர்ந்து நடைபெற்றது. இச்சோதனை நிறைவடைந்த பின்பே அங்கு ஆவணங்கள் மற்றும் ரொக்கப் பணம் ஏதும் கைப்பற்றப்பட்ட விபரங்கள் தெரிய வரும். அதேநேரத்தில், கடந்த ஜூன் 23 சென்னையில் உள்ள  வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்  றது. அப்போது, எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர் களுக்கு பணம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. அத னடிப்படையில் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய ஆத ரவாளராக உள்ள செய்யாதுரை வீட்டில் இந்த சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது. 

2 டன் ரேசன் அரிசி கடத்தியவர் கைது

விருதுநகர், ஜூலை 6- விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணறு அருகே சரக்கு  வாகனத்தில் கடத்தப்பட்ட 2 டன் ரேசன் அரிசியை போலீ சார் பறிமுதல் செய்தனர். விருதுநகர் மாவட்ட உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  அதன்பேரில் காவல் ஆய்வாளர் ஆல்பின் பிரிஜிட்மேரி தலைமையில் போலீசார் மல்லாங்கிணறு ஆரம்ப சுகாதார  நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 50 மூடைகளில் தலா 40 கிலோ விதம் 2 டன் ரேசன் அரிசி இருந்தது. இதையடுத்து, சரக்கு வாகனம் 2 டன்  ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர். மேலும் லாரி உரி மையாளர் மதுரை முனிச்சாலையை சேர்ந்த கார்த்தி கேயன் (27) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாலை விபத்தில் ஓட்டுநர் பலி

விருதுநகர், ஜூலை 6- விருதுநகர் அருகே உள்ள காருசேரி கிராமத்தை சேர்ந்தவர் அருள் (22). ஓட்டுநராக பணியாற்றி வந்த இவர்  மோட்டார் சைக்கிளில் விருதுநகர் சிவகாசி சாலையில் சென்று கொண்டிருநதார். ஆமத்தூர் அருகே சென்ற போது, எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி கீழே விழுந்  தார். அதில் படுகாயம் அடைந்து அருள் சம்பவ இடத்தி லேயே பலியாகினார். இதுகுறித்த புகாரின்பேரில் ஆமத்  தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜூலை 10 தேனியில்  கூடைப்பந்து அணிகள் தேர்வு

தேனி, ஜுலை 6- தமிழ்நாடு கூடைப்பந்து கழகம் சார்பில் 16 வயதுக்கு  உட்பட்டோருக்கு மாவட்டங்களுக்கு இடையேயான மதுரை மண்டல அளவிலான போட்டி வரும் 21 ஆம் தேதி ராமநாதபுரத்தில் தொடங்க உள்ளது. இதற்காக தேனி மாவட்ட ஆடவர் மற்றும் மகளிர் அணி கள் தேர்வு மாவட்ட விளையாட்டரங்கில் வரும் 10 ஆம்  தேதி(ஞாயிறு) காலை 7 மணிக்கு நடைபெற உள்ளது. 01.01.2006 க்கு பின் பிறந்தவர்கள் உரிய சான்றுகளு டன் நேரில் வரலாம். கூடுதல் விபரங்களுக்கு 94421 51345  என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட கூடைப்பந்து கழகச் செயலாளர் அஸ்வின்நந்தா தெரி வித்துள்ளார்.

ஜவுளிக்கடை ஊழியர் தற்கொலை

திருவில்லிபுத்தூர், ஜூலை 6- திருவில்லிபுத்தூர் அருகே உள்ள சுந்தரபாண்டியன் சாலியர் தெற்கு தெருவில் வசிப்பவர் ஜெயக்குமார் (வயது  29). இவர் புதுக்கோட்டையில் உள்ள  ஜவுளிக்கடையில் பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று விடுமுறை காரணமாக சுந்தர பாண்டியம் வந்த ஜெயக்குமார் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.  இதுகுறித்து அவரது தந்தை கணேசன்  அளித்த புகா ரின் பேரில் கிருஷ்ணன்கோவில் போலீசார் வழக்கு பதிவு  செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வயல்வெளியில் மின் வேலியில் சிக்கி ஆட்டோ  ஓட்டுநர் பலி

சிவகங்கை, ஜூலை 6- சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே மிளகனூ ரைச் சேர்ந்தவர் செந்தில் முருகன் (40) .மானாமதுரை பைபாஸ் ரோடு ஆட்டோ ஸ்டாண்டில் இருந்து ஷேர் ஆட்டோ ஓட்டி வந்தார்.  செவ்வாயன்று இரவு பணி முடிந்து வீடு திரும்பவில்லை. போனும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டி ருந்தது. உறவினர்கள் தேடி சென்ற போது மானாமதுரை யில் இருந்து மிளகனூர் செல்லும்  பாதையில் பீசர் பட்டினம்  என்ற இடத்தில் வயல் வெளியில் காயங்களுடன் இறந்து  கிடந்தார். விசாரணையில் ஸ்டீபன்ராஜ் என்பவர் காட்டு  பன்றிக்காக வயலில் அனுமதியின்றி மின் வேலி அமைத்  துள்ளார். இரவில் மிளகனூர் சென்ற செந்தில் முருகன்  இயற்கை உபாதைக்காக வயல் வெளியில் இறங்கிய போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். மானாமதுரை போலீசார் உடலை கைப்பற்றி நில உரிமையாளர் ஸ்டீபன்  ராஜிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.