districts

img

அய்யனாபுரத்தில் தோழர் காளிமுத்து நினைவகம்- இலவச பயிற்சி மையம் திறப்பு விழா

இராஜபாளையம், செப்.28-  இராஜபாளையம் கிழக்கு ஒன்றியம் அய்யனாபுரத்தில் கைத்தறி தொழிலாளர் சங்கத்தின் முன்னாள் மாவட்ட  செயலாளர் மறைந்த தோழர் காளிமுத்து நினைவக திறப்பு விழா மற்றும் அரசு போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி மையம் திறப்பு விழா சிஐடியு சார்பில் நடை பெற்றது. நிகழ்ச்சிக்கு சிஐடியு தமிழ்நாடு விசைத்தறி தொழிலாளர் சங்க மாவட்ட பொது செயலாளர் சோமசுந்தரம் தலைமை தாங்கினார்.  சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தர ராசன், நினைவகத்தையும் போட்டித் தேர்வு களுக்கான இலவச பயிற்சி மையத்தினை யும் திறந்து வைத்து உரையாற்றினார். சிஐடியு மாவட்டத் தலைவர் மகாலட்சுமி, மாவட்டச் செயலாளர் பி.என்.தேவா, மாவட்ட துணைத் தலைவர் ஜி. கணேசன், சாலைபோக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம்.திரு மலை, மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கே அர்ஜுணன், ராஜ பாளையம் கிழக்கு ஒன்றிய செயலாளர் முனியாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.