வேடசந்தூர், ஜூலை 10- திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் நேருஜி நகரில் உள்ள அரசு கிளை நூலகத்தில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் சார்பாக 36 வது தேசிய புத்தக கண்காட்சி தொடங்கி யது. துவக்க விழாவிற்கு மாவட்ட நூலக அலுவலர் சரவ ணக்குமார் தலைமை வகித்தார். பேரூராட்சி தலைவர் மேகலாகார்த்திகேயன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மண்டல மேலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன் னிலை வகித்துப்பேசினார். கிளை நூலகர் பச்சையம் மாள் வரவேற்றுப்பேசினார். விழாவில் வேடசந்தூர் ஊராட்சி ஒன்றியக் குழு தலை வர் சவுடீஸ்வரி கோவிந்தன் புத்தக கண்காட்சியை திறந்து வைத்து முதல் விற்பனையை துவக்கி வைத்துப்பேசி னார். நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் கிளைமேலாளர் பண்டரி நாதன் நன்றி கூறினார். இக்கண்காட்சி வருகின்ற 20 ஆம் தேதி வரை நடக்கிறது.இக்கண்காட்சியில் அனைத்து வித மான புத்தகங்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.