districts

மதுரை விரைவு செய்திகள்

மடப்புரம் கோவிலில்  வணிக வளாகம் கட்ட டெண்டர் 

சிவகங்கை, மே 20- சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் கோவில் வளாகத்தில் வணிக வளாகம் கட்டுவதற்கு ரூ.2 கோடியே 17 லட்சத்து 17 ஆயிரத்து 630 மதிப்பில் டெண்டர் விடப்பட்டுள்ளது. இக்கோவிலில்  மிகுந்த வசதியான பெரிய வணிக வளாகம் உருவாக உள்ளது. கோவிலுக்கு சொந்தமான இடத்தில் வணிக வளாகம், வாகன நிறுத்தம் ,பக்தர்கள் தங்கும் அறை ஆகியவை  நவீன வசதிகளோடு உரு வாக்கப்பட டெண்டர் விடப்பட்டுள்ளது. மேலும் பல வசதி கள் செய்யப்பட உள்ளதாக கோவில் உதவி ஆணையர் தெரிவித்தார்.

அனுமதியின்றி வண்டல்  மண் அள்ளிய இருவர் கைது

விருதுநகர், மே.20- விருதுநகர் அருகே அரசு அனுமதியின்றி வண்டல் மண் ஏற்றிச் சென்ற லாரியை போலீசார் பறிமுதல் செய்த னர். விருதுநகர் அருகே உள்ள எரிச்சநத்தம் பகுதி யில் எம்.புதுப்பட்டி போலீசார் வாகன சோதனை மேற் ்கொண்டனர். அப்போது, அவ்வழியே வந்த வாகனத்தை மறித்து சோதனையிட்டனர். அதில் அரசு அனுமதியின்றி வண்டல் மண் இருப்பது கண்டறியப்பட்டது. இதைய டுத்து, வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் ,சங்கிலி முருகன், நாகராஜ் ஆகியோரை கைது செய்தனர்.

மலைப்பகுதியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

கடமலைக்குண்டு, மே.20- தேனி மாவட்டம், கடமலைக்குண்டு அருகே கொம்புக் காரன்புலியூர் கிராமத்தை சேர்ந்தவர் தமிழன் என்பவ ரின் மகன் கார்த்திக் (வயது 21). ஜே.சி.பி வாகன ஓட்டு நராக வேலை செய்து வந்தார். கார்த்திக் கடந்த ஒரு வரு டமாக அல்சர் நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். வெள்ளிக்கிழமை காலையில் கார்த்திக் அவரது வீட்டி லிருந்த ஆடுகளை மேய்ச்சலுக்காக அருகில் உள்ள  மலைப்பகுதிக்கு அழைத்து சென்றார். அவர் சென்று நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால் சந்தேகமடைந்த அவரின் பெற்றோர் மலைப்பகுதியில் சென்று தேடிப் பார்த்தனர். அப்போது மலைப்பகுதியில் உள்ள மரத்தில் கார்த்திக் தூக்கில் தொங்கியவாறு சடலமாக கிடப்பதை பார்த்து அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.  இது தொடர்பாக தகவலறிந்த கடமலைக்குண்டு போலீசார் கார்த்திக் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் தற்கொலை செய்து கொண்ட தற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

புகையிலை விற்ற  கடைக்கு சீல்வைப்பு

காரியாபட்டி, மே.20- புகையிலை பொருட்கள் விற்ற கடையை பூட்டி அதிகாரிகள் `சீல்’ வைத்தனர். விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே உள்ள வில்லிபத்திரி பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் (51). இவர் பல சரக்கு கடை வைத்துள்ளார்.   மல்லாங்கிணறு காவல் நிலைய ஆய்வாளர் ஜோதிமுத்து தலைமையி லான போலீசார் அங்கு திடீர்  சோதனை நடத்தினர்.இதில், மாரியப்பன் கடையில் ரூ. 50 ஆயிரம் மதிப்பி லான  தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப் பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவற்றை கைப் பற்றிய போலீசார்  மாரியப்பனை   கைது செய்தனர். இதையடுத்து, அருப்புக்கோட்டை உணவு பாது காப்புத்துறை அலுவலர் காசிம் தலைமையிலான அதிகாரி கள்  புகையிலைப்  பொருட்கள் விற்பனை செய்த மாரி யப்பனின் கடையை பூட்டி சீல் வைத்தனர்.

ஆண்கள் கருத்தடை  செய்திட ரூ.5300 : ஆட்சியர் தகவல்

விருதுநகர், மே.20- விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் ஆண்களுக்கான நவீன கருத்தடை சிகிச்சை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,  பெண்களுக்கு செய்வதை விட ஆண்களுக்கு செய்யும் கருத்தடை அறுவை சிகிச்சை மிக எளிதானது. 5 நிமி டங்களில் பாதுகாப்பாக செய்திட முடியும். தையல் கிடை யாது, மருத்துமவனையில் தங்க வேண்டிய அவசியம் இல்லை. அறுவை சிகிச்சை செய்வோருக்க ரூ.1100 உடனே வழங்கப்படும். ஊக்குவிப்பாளர்களுக்கு ரூ.200 வழங்கப்படும்.  ரூ.4 ஆயிரம் பயனாளிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

ஜூன் 6 இல் வாகனங்கள் ஏலம்

விருதுநகர், மே.20- விருதுநகர் மாவட்ட வேளாண்மை இணை இயக்கு நர் அலுவலகத்தில் கழிவு நீக்கம் செய்யப்பட்ட 3 வாக னங்கள் வரும் ஜூன் 6 அன்று காலை 11 மணிக்கு ஏலம் விடப்படும். இதற்கான முன் வைப்புத்தொகை ரூ.5ஆயிரம் ஆகும். அதை அலுவலகத்தில் செலுத்தி ஏலத்தில் கலந்து கொள்ள பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம் என வேளாண்மை இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது

விருதுநகர், மே.20- விருதுநகர், அல்லம்பட்டியைச் சேர்ந்த பழனிகுமார் மகன் சுகன்ராஜ். இவர் மீது கிழக்கு காவல் நிலை யத்தில் கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. இவர் பொது மக்களுக்கு தொடர்ந்து  அச்சுறுத்தல் ஏற்படுத்தி, அமைதியை சீர்குலைக்கும் செயல்களில் ஈடுபடுவதால், அவரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர் ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் சுகன்ராஜை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி உத்தரவிட்டார்.

இராமநாதபுரம்:  தமுஎகச கிளை மாநாடுகள்

இராமநாதபுரம்,மே 20- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் -கலைஞர்கள் சங்கத்தின் கிளை மாநாடுகள் இராமநாதபுரம், திருவாடானை ,கமுதி, சத்திரக்குடி, சித்தார்கோட்டை, இராமேஸ்வரம், உத்திரகோசமங்கை ,முதுகுளத்தூர் , பரமக்குடி ஆகிய இடங்களில் நடைபெற்றது. இராமநாதபுரம் கிளை தலைவராக பழனியாண்டி, செயலாளராக பேரா. ஸ்டாலின் ,பொருளாளராக கோவிந்த ரவி, திருவாடானை கிளைத் தலைவராக வழக்க றிஞர் தனபால், செயலாளராக ஆதிரன், கமுதி கிளை தலைவராக பரமசிவம், செயலாளராக கண்ணதாசன்,  பொருளாளராக சக்தி முனீஸ்வரி,  சத்திரக்குடி தலை வராக கருணாநிதி,  செயலாளராக முத்துலட்சுமி,  பொரு ளாளராக ராம்கி , சித்தார்கோட்டை கிளை தலைவராக கலையரசன்,  செயலாளராக பிரேம்குமார் , பொருளா ளராக எஸ்.ராஜா,  இராமேஸ்வரம் கிளைத் தலைவராக மரிய வின்சி, செயலாளராக வில்லியம் ஜாய்சி ,பொரு ளாளராக திவ்யா , உத்திரகோசமங்கை கிளைத் தலை வராக துரைப்பாண்டி,  செயலாளராக குருசாமி, பொருளா ளராக விஜய வள்ளி,  முதுகுளத்தூர் கிளை தலைவராக துரைப்பாண்டியன், செயலாளராக வழக்கறிஞர் சந்திர சேகரன்,  பொருளாளராக குருசாமி,  பரமக்குடி கிளை தலை வராக பேரா. ரேணுகா தேவி , செயலாளராக வசந்த குமார்,  பொருளாளராக அண்ணாதுரை ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். கிளை மாநாடுகளில் மாவட்ட செயலா ளர் மரு. வான் தமிழ் இளம்பரிதி, மாவட்ட நிர்வாகிகள் என். கலையரசன், பேரா.ஸ்டாலின். முகவை அழகுடையான், வழக்கறிஞர் சந்திரசேகரன், முத்துலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

லாரி - வேன் மோதி 3 பேர் படுகாயம்

சின்னாளபட்டி, மே 20- விருதுநகரை சேர்ந்த முனியாண்டி மகன் ராமர்(45) சிவகாசியிலிருந்து பால் பாக்கெட் கவர்களுடன் வேனில்  மூலம் திண்டுக்கல்-பழனி சாலையில் அன்னூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். பெரியகோட்டை செங்கல் சூளை யிலிருந்து செங்கல் ஏற்றிக் கொண்டு லாரியை ஓட்டிக் கொண்டு வந்த செல்வராஜ் பாலம்ராஜக்காபட்டி பிரிவில் நின்று கொண்டிருந்த பேருந்தை ஓவர்டேக் செய்யும் போது எதிர்பாராத விதமாக வேன் மீது மோதியதில்  வேன் குப்புற கவிழ்ந்தது. லாரி அருகில் உள்ள ஒர்க்சாப்பில் புகுந்தது. இதில்  வேன் ஓட்டுநர் ராமர் மற்றும் கிளீனர் வீரபாண்டிக்கு படுகாயங்கள் ஏற்பட்டது. பெரியகோட்டை யை சேர்ந்த லாரி ஓட்டுநர் செல்வராஜ்க்கு முதுகு, கால்க ளில் காயங்கள் ஏற்பட்டதால் திண்டுக்கல் அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்;டனர். சம்பவ இடத்திற்கு வந்த ரெட்டியார்சத்திரம் காவல்துறை அதிகாரிகள் போக்குவரத்தை சீர் செய்ததோடு காய மடைந்தவரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த னர்.  இதுகுறித்து அப்பகுதி  பொதுமக்கள் கூறுகையில், பழனி-திண்டுக்கல் சாலையில்  பாலம்ராஜக்காபட்டி பிரிவில் பேருந்து நின்று செல்லும் போது எதிரே வரும் வாக னங்கள் மற்றும் குறுக்கே வரும் பொதுமக்கள் விபத்தில் சிக்குகின்றனர். இதை தவிர்க்க பேருந்து நிறுத்தத்தை 100 அடி தூரம் கிழக்கு அல்லது மேற்குப் பகுதியில் மாற்றியமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

நத்தம் அய்யாபட்டியில் ஜல்லிக்கட்டு

நத்தம், மே 20- திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே அய்யா பட்டியில் உள்ள காளியம்மன், கருப்புசாமி கோவில் திரு விழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. போட்டியை வருவாய் கோட்டாட்சியர் பிரேம்குமார், தாசில்தார் சுகந்தி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி  வைத்தனர். முன்னதாக மாடுபிடி வீரர்கள் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். அதன் பின்னர் திண்டுக் கல்,சிவகங்கை,திருச்சி, மதுரை, தேனி, புதுக்கோட்டை, சிவகங்கை, உள்ளிட்ட பல மாவட்டங்களைச் சேர்ந்த 409 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. முறையான ஆவணங்கள் இல்லாத 10 காளைகள் வெளியேற்றப் பட்டன. 6 சுற்றுகளாக நடந்த போட்டியில் 269 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர்.  பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும்,  காளைகளை அடக்கிய வீரர்களுக்கும்,வெள்ளி காசுகள், கட்டில், பீரோ, சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.  இதில் காளைகள் முட்டியதில் பார்வையாளர்களான நடுவனூரை சேர்ந்த கார்த்தி (25), வெள்ளக்குட்டு பகுதியை சேர்ந்த பாண்டி(55), அப்பாஸ்புரத்தை சேர்ந்த பாண்டிமுருகன்(28), அலங்காநல்லூர்- வெள்ளை யம்பட்டியை சேர்ந்த ஆனந்தராஜ்(55) உள்பட 15 பேர் காயமடைந்தனர். இதில் 2 பேர் மேல் சிகிச்சைக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன்  வெற்றி பெற்ற மாடுகளுக்கு பரிசுகள் வழங்கினார்.  பாது காப்புப்பணியில் மாவட்ட இணைகாவல் கண்காணிப் பாளர் அருண்கபிலன், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வெள்ளைச்சாமி ஆகியோர் தலைமை யில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

இராமேஸ்வரம் முழுமைத் திட்டம் தொடர்பாக கருத்துக்கேட்புக் கூட்டம்

இராமநாதபுரம் ,மே 20- இராமநாதபுரம் மாவட்டம் நகர் ஊரமைப்பு அலுவலகம் சார்பில் இராமேஸ் வரம் முழுமைத் திட்டம் தொடர்பான  கருத் துக்கேட்புக்  கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கர் லால் குமாவத்  தலைமையில் நடை பெற்றது.  அம்ருத் திட்டத்தின் கீழ் 53 சதுர கிலோ/மீட்டர் பரப்பளவில் இராமேஸ் வரம் நகராட்சியை உள்ளடக்கிய இரா மேஸ்வரம் உள்ளூர் திட்டமிடல் பகுதிக் கான  முழுமை திட்டம் தயாரிப்பது தொடர் பான கருத்துக்கேட்டுப் கூட்டத்தில், 2041 ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படை யாக கொண்டு திடக்கழிவு மேலாண்மை, குடி தண்ணீர், மின்சாரம், பள்ளிக்கல்வி, சுகா தாரம் மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட வற்றை கருத்தில் கொண்டு புதிய திட்டங்கள் செயல்படுத்த வேண்டும் எனவும்,சுற்றுலா வசதிகளை மேம்படுத்தவும், தண்ணீர் தொடர்பான விளையாட்டுகளை ஊக்கப் படுத்தவும்,ராமேஸ்வரம் கோயிலைச் சுற்றி பாரம்பரிய மற்றும் கலாச்சார மண்ட லத்தை நிறுவவும்,நகராட்சி மையப் பகுதி யினை புதுப்பிக்கவும், சுற்றுலா தலங்க ளில் உணவு மற்றும் விடுதிகள் மேம் படுத்தவும்,பிரத்யேக சுற்றுலா சாலை, நீர் போக்குவரத்து சேவை அமைக்கவும், பாரம்பரியத்தை பாதுகாப்பிற்காக ஒரு சிறப் புக் கலத்தை நிறுவவும் தனுஷ்கோடியில் புகைப்படம் மற்றும் வீடியோ அருங் காட்சியகம் அமைக்கவும்,கடல் ஓடுகள் மற்றும் பனை ஓலைகளால் செய்யப்பட்ட அலங்காரப் பொருட்கள் போன்ற குடிசைத் தொழில்களை மகளிர் சுய உதவிக் குழு வினை பங்களிப்புடன் தயாரித்து விற்பனை செய்யவும், இராமேஸ்வரம் கோவிலுக்கு நேரடியாக செல்ல சுற்றுச் சாலை அமைக்க வும்,பொறியியல் மற்றும் மருத்துவக் கல் லூரிகள் அமைப்பதற்கு ஊக்குவிக்க வும்,கடற்கரை பகுதிகளை சுற்றுலா பய ணிகளை கவரும் வண்ணம் மேம்படுத்த திட்டம் தயாரிக்கவும், மீன் வளம் தொடர்பான தொழிற்சாலைகள் ஏற்படுத்தவும் குறுங் காடு வளர்ப்பினை ஊக்கப் படுத்தவும், ஹெலிகாப்டர்,கலங்கரை விளக்கு சுற்று லாவினை ஏற்படுத்தவும், இராமேஸ்வரம் ரயில்நிலையத்தில் பாரம்பரிய மற்றும் கலாச்சார அருங்காட்சியகம் அமைக்கவும், ஹெலிகாப்டர் தளம் மற்ற மினி விமான நிலையம் அமைக்கவும், அனைத்து பகுதிகளிலும் அடையாள பலகைகள் அமைக்கவும்கூடுதல் வாகன காப்பகம் மற்றும் கழிப்பறைகள் மேம்படுத்த திட்டங் கள் தொடர்பாக அனைத்துத் துறையினரி டம்  ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இராமேஸ்வரம் முழுமை திட்டம் தொ டர்பாக அறிக்கையானது தயாரித்து, மாற்றங்களைச் செயல்படுத்தவும்,பல்வேறு துறை ரீதியாக வழங்கப்படும் பரிந்துரை களை அறிக்கையின் அடுத்த கூட்டத்தில் இணைக்கவும் அறிவுறுத்தப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட நகரமைப்பு அலுவலக உதவி இயக்குனர் திரு.செல்வ ராஜ் அவர்கள், அனைத்துத்துறை அரசு அலு வலர்கள் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதி கள் பலர் கலந்துக்கொண்டனர்.