districts

பொது சொத்து அபகரிப்பு 14 பேர் மீது வழக்கு பதிய உயர்நீதிமன்றம் உத்தரவு

திண்டுக்கல், மே 23- பொதுச் சொத்தை அபகரிக்க மோசடி பத்திரம் தயார் செய்ய உதவிய  அரசு அதிகாரிகள் உள்ளிட்ட 14 பேர்  மீது வழக்குப் பதிவு செய்ய சென்னை மதுரை உயர்நீதி மன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.  திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா பெருமாள் கோவில்பட்டி பகுதி யைச் சேர்ந்தவர் வீரக்கவுண்டன். இவ ருக்கு ஏழு மகன்களும், மூன்று மகள் களும் உள்ளனர். 1935-ஆம் ஆண்டு குடும்பத்துடன் வீரக்கவுண்டன் மலேசி யாவில் குடியேறி 1962-ல் குடியுரிமை பெற்றுவிடுகிறார். பெருமாள்கோவில் பட்டியில் பொதுமக்களுக்கு சொந்த மான பதினெட்டரை சென்ட் நிலம் உள்ளது.  இதை அதே பகுதியைச் சேர்ந்த வீரக்  கவுண்டன் மற்றும் அவரது மகன் கரியனி டம் 1961-ஆம் ஆண்டு ரூ.700-க்கு இந்த ஊரில் உள்ள நான்கு சமூகத்தைச்  சேர்ந்தவர்கள் கிரயம் செய்துகொண்  டுள்ளனர். இந்தக் கிரயப் பத்திரத்தில்  ஊர் பொதுமக்களின் நன்மைக்காக, ஊர்  பொதுக்கேணி மற்றும், அரசு கட்டடம் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இந்நிலையில் மலேசியாவில் வாழும் வீரக்கவுண்டன் 30.8.2000ம் ஆண்டு மலே சியாவில் இறந்துவிட்டார். அங்கு இறந்த தற்கான இறப்பு சான்றிதழும் தரப்பட் டுள்ளது. 

இந்நிலையில் வீரக்கவுண்டனின் மூன்றாவது மகனான கரியனும், அவ ரது மனைவி கரியக்காளும், ஊர் பொது நிலமான பதினெட்டரை சென்ட் நிலத்தை உரிமை கொண்டாடியுள்ளனர். 2014-ஆம் ஆண்டு மே 4-ஆம் தேதி கிராம நிர்வாக அதிகாரியிடம் வீரக்கவுண்டன் பெருமாள் கோவில்பட்டியில் இறந்தது போன்று இறப்புச் சான்றிதழும், வாரிசுச் சான்றிதழும் பெற்றுள்ளனர்.  இந்தச் சான்றிதழை வைத்து கரிய னும், கரியனின் மனைவி கரியக்காளும் சேர்ந்து ஊர் பொது நிலமான பதினெட்  டரை சென்ட் நிலத்தை போலி பத்திரம் தயார் செய்து பத்திரப் பதிவு அலுவல கத்தில் பதிவு செய்தனர். இந்த இடத்தை கரியன் தனது மனைவி கரியக்காளுக்கு தான செட்டில்மெண்ட் செய்துள்ளார். தற்போது இந்த இடத்தை தனது தங்கை யின் கணவர் காளியப்பனுக்கு பவர் எழுதி கொடுத்துள்ளனர். காளியப்பன் அப்பகுதியில் உள்ள குழுந்தான்சேகர் என்பவரது மகன்களான வீரமணி, புக ழேந்தி ஆகிய இருவருக்கு 1.9.2021 அன்று ரூ.33 லட்சத்திற்கு விற்றுள்ளார். இதற்காக அரசு மருத்துவர் முரளி யிடம் சென்று மலேசியாவில் வாழ்ந்து வரக்கூடிய கரியன், அவரது மனைவி கரியக்காள் ஆகியோர் மருத்துவரிடம் நேரடியாகச் சென்று அவர் முன்னிலை யில் கையெழுத்திட்டதாக போலி மருத்துவச் சான்று பெற்று பத்திரமும் பதியப்பட்டுள்ளது. 

இந்த தகவலை அறிந்த பெருமாள் கோவில்பட்டி மக்கள் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு  மறியல் நடத்தி அன்றைய மாவட்ட ஆட்சி யர் விஜயலட்சுமியிடம் மனுக் கொடுத்த னர். மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சி யர் திண்டுக்கல் மாவட்ட காவல்கண்கா ணிப்பாளருக்கு பரிந்துரை செய்தார்.  இந்த நிலையில் வழக்கறிஞர் தேவ ராஜ் மூலம் கடந்த 23.3.2022 அன்று  திண்டுக்கல் உரிமையியல் நீதிமன்றத் தில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் ஒரு மாத காலத்திற்கு விசாரணை செய்து போலி  பத்திரம் தயார் செய்து நிலத்தை அபக ரித்து மோசடி செய்து விற்றவர்கள், மற்றும் அவர்களுக்கு உதவிய கிராம  நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வா ளர், வட்டாட்சியர், அரசு மருத்துவர், பத்திர பதிவு அலுவலர் உள்ளிட்ட 14 பேர் மீது வழக்குப் தொடர உத்தரவிட்டார்.  இதுகுறித்து நடவடிக்கை இல்லாத தால் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் 25.4.2022 அன்று வழக்கு தொடுக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கை விசாரித்து உயர்நீதிமன்றக் கிளை நிலமோசடியாளர்கள் 14 பேர் மீதும் வழக்கு பதிய உத்தரவிட்டது.  இதையடுத்து ரமேஷ், வருவாய் ஆய்வாளர் மூர்த்தி, வட்டாட்சியர் சிவக்  குமார், அரசு மருத்துவர் முரளி மற்றும்  கரியன், கரியன் மனைவி கரியக்காள், கரியன் தங்கை கணவர் காளியப்பன், சென்னியம்மாள், அமல்ராஜ், வெள் ளைச்சாமி, வீரமணி, புகழேந்தி, ஜோசப்,  அருள்நாதன் ஆகிய 14 பேர் மீது  மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறை யினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.