districts

12 ஆண்டுகளாக மூடியுள்ள மதுரை மேலநேரி கிராம கோவிலை திறக்க 6 மாதத்தில் உத்தரவு பிறப்பித்திடுக!

அறநிலையத்துறை ஆணையருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை, அக்.7- 12 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ள மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள  மேலநேரி கிராமத்தில் அமைந்துள்ள  வால குருநாதசுவாமி   கோவிலை,  மீண்டும் திறப்பது குறித்து,   இந்து சமய அறநிலை யத்துறை இணை ஆணையர்,  அனைத்துத் தரப்பினரிடம் விசாரணை நடத்தி, 6 மாதங்க ளுக்குள் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மதுரை திருமங்கலம் பகுதியை சேர்ந்த சீனி என்பவர் உயர்நீதி மன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில், மதுரை மாவட்டம், திருமங்கலம் தாலுகா மேலநேரி கிராமத்தில்  வாலகுருநாதசுவாமி திருக் கோயிலில்  பல தரப்பினரிடையே ஏற்பட்ட பிரச்சனையால் , இந்த கோவில் கடந்த 12 ஆண்டுகளாக மூடப்பட்டு உள்ளது. இந்த நிலையில் அனைத்துத்தரப்புனரிடமும் சுமூக உறவு எட்டப்படாத நிலையில், கோவில் திறக்கப்பட உள்ளது என சிறப்பு அலுவலர் நோட்டீஸ் வெளியிட்டுள்ளார். இந்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று  கூறியிருந்தார். இந்த வழக்கின் விசாரணை நீதிபதி குமரேஷ் பாபு முன்பு வெள்ளியன்று நடைபெற்றது. அப்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், மதுரை மாவட்டம், திருமங்கலம் தாலுகா மேலநேரி கிராமத்தில் அமைந்துள்ள  வால குருநாதசுவாமி கோயிலில்  சிலையை கோவிலில் வைத்திருப்பது தொடர்பாக, இரு பிரிவினருக்கு இடையேயான கருத்து வேறுபாடுகள் மற்றும் சிவில்  வழக்குகள் காரணமாக கோவில் மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்திற்கும் மேலாக நிலுவையில் உள்ளன.

 2011 ஆம் ஆண்டிலேயே, இந்த கோவில் பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர தகுதியான சிறப்பு அலுவலர்  நியமிக்கப்பட்டாலும், கடந்த 12 ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் தொடங்கப்படாமல், இருந்தது.தற்போது திடீரென கோவில் திறக்கப்படும் என நோட்டீஸ் அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது.   இரண்டு போட்டி குழுக்களுக்கு இடை யேயான தகராறு காரணமாக கோவிலை மூடுவதன் மூலம் கடவுளை வணங்கு வதை நிறுத்த முடியாது. கடந்த 2011 ஆம் ஆண்டிலேயே தகுதி யான நபரை அறநிலைய துறை நியமித்த போதும் கோவிலை கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை . மனுதாரர் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு சொந்தமானது என்று கூறி னாலும் கூட, அந்த கோவிலை தனிப்பட்ட கோவிலாக அறிவிக்க எந்த நடவடிக்கை யும் எடுக்கவில்லை. கோவில் நிர்வா கத்தில் பிரச்சினை இல்லை. இவ்வாறு  இருக்கும் போது, அறநிலையத்துறையால் நியமிக்கப்பட்ட அலுவலர்  , திடீரென கோவிலை திறக்க உள்ளோம் என வெளியிடப்பட்ட நோட்டீஸ், முற்றிலும் சட்டத்திற்கு உட்பட்டது அல்ல.  கோவிலை திறப்பதற்காக சிறப்பு அலுவலர் பிறப்பித்த நோட்டீஸ் ரத்து செய்யப்படுகிறது. கடவுளை வழிபடுவது ஒவ்வொரு தனிநபருக்கும் அவரவர் தனிப்பட்ட நம்பிக்கையின்படி உள்ள உரிமை.  எனவே,  இந்து சமய அறநிலை யத்துறை இணை ஆணையர்,  அனைத்து தரப்பினரிடம் விசாரணை நடத்தி, 6 மாதங் களுக்குள் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டார். மேலும் வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.

;