தேனி, ஜூலை 28- கூடலூரில் மறைந்த முது பெரும் தோழர் பொ .சிவ ராஜ் (வயது 84)உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் ஏ.வி.அண்ணாமலை உள் ளிட்ட தலைவர்கள் இறுதி மரியாதை செலுத்தினர் . விவசாயத் தொழிலா ளர்களின் நலனுக்காக நெல் அறுவடை கூலி போராட்டத் தில் முன்னணி படை வீரராக கலந்து கொண்ட இவரை அன்றைய நில உடமைதா ரர்கள் கடுமையாக தாக்கி மண்டையை உடைத்தனர். இது போன்ற பல்வேறு போராட் டங்களில் கலந்து கொண்டு, சிறை வாழ்க்கை, தலைமறைவு வாழ்க்கை மேற்கொண்டவர் சிவராஜ். வயது முதிர்வு காரண மாக ஓய்வு எடுத்து வந்த அவர், வியாழனன்று அதிகாலை காலமானார். அன்னாரின் மறைவு செய்தி அறிந்து கட்சி யின் தேனி மாவட்டச் செயலா ளர் ஏ.வி.அண்ணாமலை ,மாவட்ட செயற்குழு உறுப்பி னர் டி.வெங்கடேசன் ,மூத்த தலைவர்கள் கே.ராஜப்பன், எல்.ஆர்.சங்கரசுப்பு, ஏரியா செயலாளர் பி.ஜெயராஜ் உள்ளிட்டோர் மாலை அணி வித்து இறுதி மரியாதை செலுத்தினர். பின்னர் முத்துச்சாமி தலைமையில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் மாவட் டச் செயலாளர் ஏ.வி .அண் ணாமலை,ஏரியா குழு செய லாளர் பி .ஜெயராஜ். மாவட் டக்குழு உறுப்பினர் பி.ஜெயன், கே .சடமாயன் ஆகியோர் பேசினர். நிகழ்வில் ஜி.பி . முருகன் மணிகண்டன் எஸ். உசேன், கோபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.