districts

img

வெங்காயப்பரப்பு விரிவாக்க விவசாயிக்கு மானியம் வழங்கல்

தென்காசி, அக்.26-  தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வெள்ளியன்று மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது.  அதையொட்டி, குருவிகுளம் மற்றும் மேலநீலிதநல்லூர் வட்டார தோட்டக்கலைத் துறையினர் இணைந்து ஏற்பாடு செய்திருந்த கண்காட்சியினை மாவட்ட ஆட்சித் தலைவர் துவக்கி வைத்து பார்வையிட திரளான விவசாயிகளும் கண்டு பயனடைந்தனர். விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட 210 மனுக்களுக்கு 15  நாட்களுக்குள் விரிவான மற்றும் விவசாயிகள் ஏற்றுக்கொள்ளக் கூடிய பதிலை வழங்குமாறு அனைத்து துறை அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுறுத்தினார்.  தோட்டக்கலைத் துறை மூலம் மாநில தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின் கீழ்ஒரு பயனாளிக்கு வெங்காய பரப்பு விரிவாக்கத்துக்கு ரூ.20,000 மானியமும்ம், வேளாண் பொறியியல் துறை மூலம் வேளாண் இயந்திரமயமாக்கல் துணை இயக்கத் திட்டத்தின் கீழ் இரண்டு பயனாளிகளுக்கு பவர் வீடர் கருவிகளுக்கு ரூ.1,04,000 மானியமும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் வழங்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் இரா. முருகன், வேளாண்மை இணை இயக்குநர் (பொறுப்பு) ச.கனகம்மாள், திட்ட இயக்குநர், வேளாண்மை துணை இயக்குநர் மு.உதயக்குமார், தோட்டக்கலை துணை இயக்குநர் மா. இளங்கோ, உதவி செயற்பொறியாளர் சங்கர், முதுநிலை மண்டல மேலாளர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் இரா.ராஜேஷ், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் கு. நரசிம்மன் மற்றும் அனைத்து வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்கள், அனைத்து வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர்கள், அனைத்து துறை அலுவலர்கள், அனைத்து விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.