திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை ஊராட்சி ஒன்றியம், பிலாத்து ஊராட்சி கம்பிளியம்பட்டி கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பத்மா தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இதில் துணைத் தலைவர் ராமசாமி மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் செம்பட்டி ஆர்.வி.எஸ். பத்மாவதி தோட்டக்கலைக் கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் கலந்து கொண்டு வீட்டுக் காய்கறி தோட்டம் அமைத்தல் மற்றும் தேமோர் கரைசல் பற்றி கிராம மக்களுக்கு விளக்கம் அளித்தனர்.