தேனி, ஜூலை 27- புதிய பென்சன் திட் டத்தை கைவிட்டு, பழைய பென்சன் திட்டத்தை அமல் படுத்த வேண்டும். சத்து ணவு, அங்கன்வாடி ,கிராம உதவியாளர், ஊராட்சி செய லாளர் உள்ளிட்ட அனைவ ருக்கும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அரசு துறை யில் காலியாக உள்ள 4.5 பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங் கம் சார்பில் தர்ணா நடைபெற்றது. தேனி ஆட்சியர் அலுவல கம் முன்பு நடைபெற்ற தர்ணா போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் பே. பேயத்தேவன் தலைமை வகித்தார். அரசு அனைத் துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் கே துரை ராஜ் தொடக்க உரையாற்றி னார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலா ளர் ச.தாஜுதீன் பேசினார். போராட்டத்தை ஆதரித்து தோழமைச்சங்க நிர்வாகி கள் நாகராஜன், பொ.அழகு ராஜா, பவானி சிவக்குமார், முத்துப்பாண்டியன், முத் தையா ஆகியோர் பேசினர். ராமகிருஷ்ணன் நிறைவு செய்து பேசினார். மாவட்ட பொருளாளர் முத்துக்குமார் நன்றி கூறினார்.
திண்டுக்கல்
திண்டுக்கல்லில் நெடுஞ் சாலைத்துறை உதவி கோட் டப் பொறியாளர் அலுவல கம் முன்பாக நடைபெற்ற இந்த தர்ணாவிற்கு மாவட் டத்தலைவர் முபாரக்அலி தலைமை வகித்தார். மாவட் டச்செயலாளர் விவேகானந் தன், மாநில துணைத்தலை வர் மங்களப்பாண்டியன் ஆகியோர் பேசினர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் பாக நடைபெற்ற தர்ணா விற்கு அரசு ஊழியர் சங்க மாவட்டத்தலைவர் கண்ண தாசன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பாண்டி, மாவட்ட துணைத் தலைவர் ராமமூர்த்தி, சிவக்குமார் ஆகியோர் பேசினர்.