தேனி, ஏப்.20- பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் நாட்டு நலப்பணித் திட்டமும் பெரியகுளம் அரசு மருத்துவமனையும் இணைந்து நடத்திய இரத்த தான முகாமில் 51 மாணவர்கள் ரத்த தானம் செய்தனர். இரத்த தான முகாமிற்கு தோட்டக்கலை கல்லூரி முதன்மையர் ஆறுமுகம் தலைமை வகித்தார். மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை இணை இயக்குநர் மருத்துவர் பரிமளா தேவி ரத்த வங்கி அலுவலர் பாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தோட்டக்கலை இளநிலை மற்றும் முதுநிலை பயிலும் 51 மாணாக்கர்கள் இரத்த தானம் வழங்கினர். நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் க.சி.குமரன் முகாமை ஏற்பாடு செய்திருந்தார்.