districts

img

பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்கிடுக!

துரை, அக். 26-  அரசின் பொதுத்துறை நிறுவ னங்களான தமிழ்நாடு அரசு போக்கு வரத்து, மின்சார வாரியம், டாஸ்  மாக், கூட்டுறவு,  குடிநீர் வடிகால்  வாரியம்,  நுகர்பொருள் வாணிபக்  கழகம்  உள்ளிட்ட நிறுவன ஊழியர்  களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்  கிட வேண்டும், தொழிற்சங்கங் களை அழைத்துப் பேசி அறிவித்திட வேண்டும் என வலியுறுத்தி இந்திய  தொழிற்சங்க மையம் (சிஐடியு) சார்  பில் வியாழனன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரை மாநகர் அரசரடி மின்சார  வாரிய அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்  நாடு மின் ஊழியர் மத்திய அமைப்  பின் மதுரை பெருநகர பொதுச் செய லாளர் டி.அறிவழகன் தலைமை வகித்தார். போக்குவரத்து மதுரை தொழிலாளர் சங்க பொதுச் செய லாளர் ஏ.கனகசுந்தர் துவக்கி வைத்  தார். கூட்டுறவு சங்க ஊழியர் சங்க  பொதுச்செயலாளர் எம்.துரை சாமி, மதுரை மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்க பொதுச் செயலாளர் டி.சிவக்குமார், தமிழ்நாடு குடிநீர்  வடிகால் வாரிய சங்க தலைவர் வி. அழகுமலை, சிஐடியு மாவட்டச் செயலாளர் இரா.லெனின், நுகர் பொருள் வாணிப கழக பொது தொழிலாளர் சங்க நிர்வாகி கதிரேச பாண்டியன் ஆகியோர் பேசினர். 

ஆர்ப்பாட்டத்தில் போக்கு வரத்து தொழிலாளர் மாநில சம் மேளன உதவி தலைவர் வீ.பிச்சை,  சிஐடியு மாவட்டத் தலைவர் இரா. தெய்வராஜ், மாவட்ட நிர்வாகிகள் ஜி.ராஜேந்திரன், எஸ்.சந்தியாகு, பி.பழனியம்மாள், எஸ்.பி.சிவக் குமார், அரசு போக்குவரத்து ஓய்வு  பெற்றோர் நலச் சங்க மதுரை மாவட்டத் தலைவர் எஸ்.அழகர்,  பொதுச்செயலாளர் ஆர்.வாசு தேவன், பொருளாளர் ரவி, அரசு விரைவு போக்குவரத்து கழக ஓய்வு  பெற்ற நல அமைப்பின் மாவட்டச் செயலாளர் நாகராஜன், குமார் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கலந்து கொண்டனர்.

இராமநாதபுரம்

இராமநாதபுரத்தில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு  மாவட்ட துணைச் செயலாளர், அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்  கத்தின் மத்திய சங்கச் செயலாளர் வி.பாஸ்கரன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் எம். சிவாஜி, மாவட்டத் தலைவர் எஸ்.ஏ. சந்தானம், மாவட்ட நிர்வாகிகள்  அ.சுடலைக்காசி, கே.தனுஷ் கோடி, ஆர்.வாசுதேவன் ஆகி யோர் பேசினர்.

டாஸ்மாக் தலைவர் டி.நம்பு ராஜன், அன்பரசன் (பஞ்சாலை) எம்.மணிக்கண்ணு, எஸ்.ஆனந்த், பாஸ்கரன், போஸ், பழனிச்சாமி (போக்குவரத்து) உட்பட கலந்து கொண்டனர்.

இதேபோல், வாலிநோக்கம் அரசு உப்பு நிறுவன தொழிலாளர்  சங்கம் சிஐடியு சார்பில் சங்க பொதுச் செயலாளர் வடிவேல் தலைமையில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தில் சிஐடியு மாவட்டச் செய லாளர் எம்.சிவாஜி, உப்பு நிறுவன சங்கத் தலைவர் கே.பச்சம்மாள், உப்பு நிறுவன சங்க முன்னாள் செயலாளர் குமரவடிவேல் ஆகி யோர் பேசினர். உப்பு நிறுவன சங்க நிர்வாகி கள் அற்புதமணி, முருகவேல், சாமி யடியான், கருப்பசாமி உட்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.