நவம்பர் 11-ம் தேதி காந்திகிராம நிலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர், அமைச்சர் பெருமக்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்நிலையில், செவ்வாயன்று உளவுத்துறை ஐஜி செந்தில்வேலன் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர். ஆய்வின்போது பழனி சட்டமன்ற உறுப்பினரும் திண்டுக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளருமான ஐ.பி.செந்தில்குமார், மாவட்டத் துணைச் செயலாளர் நாகராஜன், ஆத்தூர் கிழக்கு ஒன்றியச் செயலாளர் முருகேசன், சின்னாளப்பட்டி பேரூராட்சி மன்ற பொருளாளர் எஸ்.ஆர்.முருகன், மாவட்ட கவுன்சிலர் பத்மாவதி, ராஜ கணேஷ், சின்னாளப்பட்டி பேரூராட்சி மன்ற தலைவர் பிரதீபா கனகராஜ் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.