மதுரை, மார்ச் 1- சுதந்திரப்போராட்ட வீராங் கனை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் மாதர் சங்க ஸ்தாபகத் தலைவருமான கே. பி. ஜானகியம்மாள் நினைவு நாள் அஞ்சலி நிகழ்ச்சி மார்ச் 1 அன்று நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மதுரை மாவட்டக்குழு அலு வலகத்தில் நடைபெற்ற நிகழ்ச் சிக்கு மாநகர் மாவட்டச் செயலா ளர் மா. கணேசன் தலைமை வகித் தார். மாநிலக்குழு உறுப்பினர் இரா.விஜயராஜன், மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் ஜா. நர சிம்மன், அ. ரமேஷ், வை. ஸ்டாலின், எஸ்.அழகர்சாமி உள்பட பலர் கலந்துகொண்டனர். பாக்கியநாதபுரத்தில் நடை பெற்ற நிகழ்ச்சியில் மாதர் சங்க பகுதிக்குழு தலைவர் பா. பழனி யம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலப்பொன்னகரம் விசுவாச புரி மாதர் கிளை சார்பில் நடை பெற்ற நிகழ்ச்சியில் பகுதிக்குழு உறுப்பினர்கள் ஆர். ப்ரிதி, ஜெயா, தமிழரசி உள்பட பலர் கலந்து கொண்டனர். திருப்பரங்குன்றத்தில் உள்ள ஜானகியம்மாள் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது. விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் வி.உமாமகேஸ்வரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். திருப்பரங்குன்றம் கட்சி அலு வலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி யில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பி னர் எஸ்.பாலா, தாலுகா செயலாளர் எம்.ஜெயக்குமார், மாமன்ற உறுப் பினர் என்.விஜயா ஆகியோர் கலந்து கொண்டனர். ஹார்விபட்டியில் மாமன்ற உறுப்பினர் என்.விஜயா மற்றும் பலர் கலந்துகொண்டனர். மதுரை மேற்கு - 1 ஆம் பகு திக்குழு மடக்குளத்தில் கே. பி. ஜானகி அம்மாள் படிப்பகத்தில் நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற் றது. இதில் கட்சியின் மூத்த தலை வர் சி.ராமகிருஷ்ணன், மாநகர் மாவட்ட செயலாளர் மா. கணே சன், மாநிலக்குழு உறுப்பினர் இரா. விஜயராஜன், பகுதிக்குழுச் செய லாளர் கு. கணேசன் உள்ளிட்ட கலந்து கொண்டனர். எச். எம். எஸ் காலனி கே. பி. ஜானகி அம்மாள் நகரில் மாதர் சங்கம் சார்பில் நடை பெற்ற நிகழ்ச்சியில் அப்பகுதி பொது மக்கள் கலந்து கொண்டனர்.