சிவகங்கை, பிப்.1- சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சிக்கு உட்பட்ட ரயில்வே காலனி அருகே பர்மா காலனி நடு நிலைப்பள்ளி கட்டிடங்கள் அபாய கட்டத்தில் உள்ளது தொடர்பாக பெற்றோர்களும், மாணவர்களும் மாவட்ட ஆட்சி தலைவர் மதுசூதன் ரெட்டியிடம் முறையிட்டனர். இந்நிலையில் பேராசிரி யர் அன்பழகன் பள்ளி மேம் பாட்டு திட்டத்தில் தமிழகம் முழுவதும் நடுநிலைப்பள்ளி களுக்கான பள்ளிக்கட்டிடம் கட்டும் பணியை முதல்வர் மு க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வழியாக தொடங்கி வைத்தார். இதில் பர்மா காலனி நடுநிலைப் பள்ளியில் கூடு தல் கட்டிடம் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டு விழா மாவட்ட ஆட்சித் தலைவர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடந் தது. இவ்விழாவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகவையின் திட்ட இயக்குனர் சிவராமன், மானாமதுரை ஊராட்சி ஒன் றிய பெருந்தலைவர் லதா அண்ணாதுரை, மானா மதுரை நகர்மன்ற தலைவர் மாரியப்பன்கென்னடி,நகர் மன்ற துணைத் தலைவர் பாலசுந்தரம், மானாமதுரை ஊராட்சி ஒன்றிய துணை பேருந்து தலைவர் முத்து சாமி, மானாமதுரை ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ரஜினி தேவி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவ்விழா விற்கு வருகை புரிந்த மாவட்ட ஆட்சித் தலைவர் மதுசூதன ரெட்டி அனைத்து வகுப்ப றைகளுக்கும் சென்றார். மூன்று கட்டிடங்கள் கட்டப் பட்டு இங்கு எட்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. மொத்தம் 270 மாணவ, மாண விகள் படிக்கிறார்கள். இங்குள்ள வகுப்பறைப்கள் மூன்றில் இரண்டு மோசம மான நிலையில் உள்ளது. ஒவ்வொரு வகுப்பறையாக சென்று மாணவ மாணவி களிடம் ஆட்சியர் கேட்டறிந் தார். அப்போது மாணவ மாணவிகள், பெற்றோர்கள், மழை பெய்தால் கட்டிடங்கள் ஒழுகுவதாகவும் அபாய கட் டத்தில் இருப்பதாகவும் மாவட்ட ஆட்சித் தலைவரி டம் தெரிவித்தனர். இது தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் மதுசூதன்ரெட்டி, சரிசெய்ய வேண்டும் என்று பொறியாளர்களுக்கு உத்தர விட்டார்.