மதுரை, நவ.1- மதுரை மாநகராட்சி பகு தியில் நாடாளுமன்ற உறுப்பி னர் உள்ளூர் தொகுதி மேம் பாட்டு நிதியில் இருந்து கட்டுமான பணிகளுக்கான அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி மதுரை மாநகராட்சி 28-ஆவது வார்டு கோரிப் பாளையம் ஜம்புரோபுரம் மார்க்கெட் அருகில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் உள்ளூர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.8 லட்சம் மதிப்பில் சத்து ணவு கூடம் அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி புதனன்று நடை பெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாவட்டச் செய லாளர் மா.கணேசன், பகு திக்குழு செயலாளர் வி. கோட்டைசாமி, துணை மேயர் தி.நாகராஜ், வடக்கு மண்டலத் தலைவர் சரவண புவனேஸ்வரி, உதவி பொறியாளர் பொன்மணி, வார்டு மாமன்ற உறுப்பினர் உமாரவி, 23-ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் குமர வேல் ஆகியோர் கலந்து கொண்டனர். இதேபோல், எல்லீஸ் நகர் 60-ஆவது வார்டு ஆஞ்ச நேயர் கோயில் தெரு பகுதி யில் ரூ.5 லட்சம் மதிப்பில் சின்டெக்ஸ் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாமன்ற உறுப்பினர் பாமா முருகன், 56-ஆவது மாமன்ற உறுப்பினர் வை.ஜென்னி யம்மாள், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாவட்டக் குழு உறுப்பினர் ஏ.பாண்டி, பகு திக்குழு செயலாளர் வை. ஸ்டாலின் உட்பட பலர் கலந்து கொண்டனர்.