districts

தொழில் வர்த்தகத் துறையினருக்கு ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்!

மதுரை, ஜூலை 24 - 2024-25 நிதியாண்டிற்கான ஒன்றிய அரசின் பட்ஜெட், தொழில் வர்த்தகத் துறையினருக்கு ஏமாற்  றம் அளிக்கும் வகையில் உள்ள தாக தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் கூறியுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க தலைவர் ஜெகதீசன் கூறியிருப்பதாவது:

ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை, தொழில் - வணிகத் துறையினர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் ஏமாற்றம் அளிக் கும் நிதிநிலை அறிக்கையாக உள்  ளது. தொழில் வணிகத் துறையின ரும், பொதுமக்களும் பல்வேறு சலு கைகளை எதிர்பார்த்திருந்த நிலை யில் செவ்வாயன்று தாக்கல் செய்  யப்பட்டுள்ள 2024-2025-ம் நிதி  ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை யில் பெரிய அளவில் அறிவிப்புகள்  ஏதும் இல்லாதது ஏமாற்றம் அளிப்ப தாகவே உள்ளது. வருமான வரி  விகிதங்கள் குறைக்கப்பட்டு அறி விக்கப்பட்டிருந்தாலும் பெரிய அள வில் பலன் ஏதும் இல்லை. சுங்க  வரியில் மட்டும் சற்று குறைக்கப்  பட்டுள்ளது. அதே போல ஜி.எஸ்.டி. யில் விலக்கு அளிக்கப்பட்டவை களைத் தவிர்த்து வரி விகிதங்கள் 5, 12 மற்றும் 18 சதவிகிதங்கள் என  மூன்று விகிதங்களுக்குள் கொண்டு  வரப்பட வேண்டும் என்றும், வேறு  எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு  ஜி.எஸ்.டி.யில் உள்ள 28 சதவிகித வரியை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை பிரதிபலிக்கவில்லை. 

தமிழகத்திற்கான- குறிப்பாக தென் தமிழகத்திற்கான ரயில்வேத் திட்டங்கள், மெட்ரோ, விமான நிலைய மேம்பாடு உள்ளிட்ட எந்த வொரு புதிய அறிவிப்பும் இந்த பட்  ஜெட்டில் இல்லாதது வருத்தம். 

தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் மின்  னணு வர்த்தக ஏற்றுமதி மையங்  கள், 12 தொழில் பூங்காக்கள் மற்றும் நாட்டில் 9 துறைகளை உள்ளடக் கிய முன்னுரிமைத் திட்டங்கள் போன்ற அறிவிப்புகளை மட்டும்  வரவேற்கலாம். 

இவ்வாறு ஜெகதீசன் கூறியுள்ளார்.

“தொழில் நிறுவனங்கள் விவ சாயத்திற்கு அடுத்தபடியாக வேலைவாய்ப்பை வழங்கும் துறையாக இருக்கின்றன. எனவே,  அதுபோன்ற நிறுவனங்கள், தொழில்துறைக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்க வேண்டும். அதற்கான அறிவிப்புகள் பட்ஜெட்  டில் இடம் பெறவில்லை” என்று  மதுரை மடீட்சியா தலைவர் லட்சுமி நாராயணன் தெரிவித்துள்ளார்.

வளர்ச்சிக்கான திட்டங்கள் பட்ஜெட்டில் இல்லை!

பொருளாதார பேராசிரியர்கள் கருத்து

மதுரை தியாகராசர் கல்லூரி பொருளாதாரத்துறை பேராசிரியர் (ஓய்வு) அசோகன் அளித்திருக்கும் பேட்டியில், “வருமான வரி  வரம்பில் சிறிய மாற்றமே உள்ளது. இது நடுத்தர மக்களுக்கு ஏமாற்றம்.  வரிச் சலுகை இருந்தால் மட்டுமே மக்களுக்கு வாங்கும் சக்தி அதி கரிக்கும். தமிழ்நாட்டுக்கு பெரியளவில் திட்டங்கள் எதுவும் பட்ஜெட்டில் இடம் பெறவில்லை. இதுவும் மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது. கார்ப்ப ரேட் நிறுவனங்களுக்கு 5 சதவிகித வரி சலுகை என்பது தேவை யில்லை. ஒன்றிய அரசுக்கு நிதி இழப்பு தான் ஏற்படும். தங்கத்திற்கான சுங்க வரி குறைப்பு என்பது நடுத்தர மக்களுக்கு பலன் தரும். குறிப்பாக ஏழை மக்கள் பயன்பெறுவர்” என்று கூறியுள்ளார்.

அமெரிக்கன் கல்லூரி பேராசிரியர் முனைவர் சி. முத்துராஜா அளித்த பேட்டியில், “ஒன்றிய பட்ஜெட்டில் வேளாண்மைத்துறைக்கு முக்கி யத்துவம், இன்றைய சூழலுக்கு ஏற்ப தொழில்நுட்ப திட்டம், படித்த  இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு திறன் மேம்பாட்டுத் திட்டம்  போன்றவை வரவேற்கத்தக்கன. பசுமை, பெண்கள், இளையோருக் கான திட்டம் என்பது படித்தவர்கள், ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கு மட்டும்  பயன் தரும். 2047-இல் இந்தியா பொருளாதார வளர்ச்சியில் 3-ஆவது  இடத்திற்கு வரும் என்கிறார்கள். அதற்கான வேகம், விவேகத்திற்கான திட்டம் எதுவும் பட்ஜெட்டில் இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.