districts

img

மூன்றாம் முறையாக நிரம்பிய சோத்துப்பாறை அணை கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு

தேனி, செப்.1- செவ்வாய்க்கிழமை இரவில் பெய்த கன மழையால் சோத்துப்பாறை அணை மூன்றாம் முறையாக நிரம்பி வழிகிறது .கும்பக்கரை அருவியில் பெரும் வெள் ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பய ணிகள் குளிக்க வனத்துறை தடை விதித் துள்ளது. கும்பக்கரை அருவியின் நீர்பிடிப்பு பகுதிகளான கொடைக்கானல், வட்ட கணல் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில  தினங்களாக அவ்வப்போது மழை பெய்து  வந்த நிலையில் கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து சற்று அதிகரித்தது. இந்நிலை யில் செவ்வாய்க்கிழமை 4 மணி முதல் நள்ளிரவு வரை அருவியின் நீர் பிடிப்பு பகுதி களில் பெய்த கனமழையால் நீர்வரத்து அதி கரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாது காப்பு கருதி அருவியில் நீர்வரத்து குறைந்து  சீராகும் வரை குளிக்கவும், அருவிக்கு செல்லவும் விதிக்கப்பட்ட தடை தொடர்வ தாக தேவதானப்பட்டி வனச்சரக சரக அதி காரி டேவிட் ராஜ் அறிவித்துள்ளார். அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணை இந்த ஆண்டு மூன்றாவது முறையாக அதன் முழுக் கொள்ளளவான 126.28 அடி யை எட்டி நிரம்பி வழிகிறது. தற்பொழுது அணைக்கு தற்போது நீர்வரத்து 97 கன அடியாக உள்ள நிலையில் அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே வெளியேற்றப் படுகிறது. தற்பொழுது அணையில் நீர் இருப்பு 100 மில்லியன் கன அடியாக உள்  ளது.