districts

img

மேலும் ஐந்து நாட்கள் கன மழை திருச்சூரில் திடீர் சூறாவளி

திருவனந்தபுரம், செப். 9- கேரளத்தில் அடுத்த 5 நாட்கள் கன மழை தொடரும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வெள்ளியன்று திருச்சூர், பாலக்காடு, மலப்புறம், கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு, சனியன்று திருச்சூர், மலப்புறம், கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு, ஞாயிறன்று மலப்புறம், கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு, திங்களன்று கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் மஞ்சள் அலார்ட் அறிவிக்கப்பட்டது. திருச்சூரில் திடீர் சூறாவளியால் பரவலான சேதம் ஏற்பட்டது.  திருச்சூரின் வரந்தரப்பள்ளி, நந்திப்புலம்,  அட்டப்பிள்ளி ஆகிய பகுதிகளில் சூறாவளி தாக்கியது. மரங்கள் சாய்ந்தன. மின் கம்பங்கள் உடைந்தன.  இச்சம்பவம் வெள்ளியன்று காலை 7.30 மணியளவில் நடந்துள்ளது.

;