சின்னாளபட்டி,செப்.2- திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஒன்றியம் வக்கம்பட்டி அருகே ஜெய்னீ நர்சிங் கல்லூரி வளா கத்தில் செயல்படும் ஆத்தூர் கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு பாட வகுப்புகள் துவக்க விழா நடை பெற்றது. விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் ச.விசாகன் தலைமை தாங்கினார். கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் கோ.காந்திநாதன் வரவேற்று பேசி னார். மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பாஸ்கரன், ஒன்றிய பெருந் தலைவர் மகேஸ்வரிமுருகேசன், ஒன்றிய செயலாளர் ஆத்தூர் முருகேசன், பாறைப்பட்டி ராமன், முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் சத்தியமூர்த்தி, மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளர் மார்கிரேட் மேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கல்லூரி மாணவர்களுக்கு பாடப்புத்த கங்களை வழங்கிப் பேசினார். நிகழ்ச்சியில் சரக துணைப்பதி வாளர் முத்துக்குமார், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநர் ம.செல்வக்குமார், உட்பட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக கல்லூரி முதல்வர் வெங்கடாசலம் நன்றி கூறினார். வகுப்பறைக்கு சென்ற கூட்டு றவுத்துறை அமைச்சர் ஐ.பெரிய சாமி மற்றும் மாவட்ட ஆட்சியர் ச.விசாகன் ஆகியோர் மாணவர்க ளுடன் அமர்ந்து அவர்களுக்கு பாடம் நடத்துவதை பார்வையிட்டார்.