districts

img

இளைஞர்களை தாக்கிய வனஅலுவலர்கள் மீது நடவடிக்கை கோரி விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

திருவில்லிபுத்தூர், நவ.9-  விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் வட்டம் மம்சாபுரம் பகுதியைச் சேர்ந்த ராமர் என்பவரின்  மகன்கள் ராமர், லட்சுமணன் ஆகியோரை  தோப்பில் இருந்தபோது அங்கு வந்த வனத்துறை அலுவலர்கள் பாரதி ஜெயக்குமார் கடற்  கரைவேல் மூவரும் கடுமை யாகத் தாக்கியுள்ளனர். வனத்துறை அலுவலர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய கோரி புதன்கிழ மையன்று தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம் சார்பில் மேக மலை புலிகள் காப்பக துணை இயக்குனர் அலுவலகம் மற்றும் மாவட்ட வன அலு வலகம் முன்பாக முற்றுகை போராட்டத்தை அறிவித்த னர். இந்நிலையில் காவல் துறை ஆய்வாளர் கீதா,  சங்கத்தின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஒரு வார காலத்திற்குள் வனத்துறை அலுவலர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்  படும் என்று உறுதி அளித்த தன் பேரில் முற்றுகை போராட்டத்தை ஆர்ப்பாட்ட மாக மாற்றினர். ஆர்ப்பாட் டத்திற்கு தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் பெருமாள் தலை மை தாங்கினார் மாவட்டச் செயலாளர் முருகன், மாநி லச் செயலாளர் அ.விஜய முருகன், தென்னை விவ சாயிகள் சங்க மாவட்டத் தலைவர் முத்தையா, சிபிஎம் மாவட்ட செயலாளர் அர்ஜுனன் ஆகியோர் பேசினர்.