தேனி ,ஜூலை 2- மேகமலை வன விவசாயிகள் வெளி யேற்றம் குறித்த தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு விவசாயிகள் சங்க க.மயிலாடும்பாறை ஒன்றிய மாநாடு கோரிக்கை விடுத்துள்ளது . தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் க.மயிலாடும்பாறை ஒன்றிய மாநாடு வருசநாட்டில் வெள்ளியன்று நடை பெற்றது. மாநாட்டிற்கு ஒன்றிய தலை வர் டி.ராமசாமி வரவேற்றுப் பேசினார்.செங்கொடியை அய்யர் தேவர் ஏற்றி வைத்தார். பிரதிநிதிகளை வரவேற்று வனக்குழு உறுப்பினர் குணசேகரன் பேசினார். மாநாட்டினை மாநிலக்குழு உறுப்பினர் கே.ராஜப்பன் தொடங்கி வைத்து உரையாற்றினார். ஆண்டி பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆ.மகாரா ஜன் வாழ்த்திப் பேசினார் .சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பெ.சண் முகம் சிறப்புரையாற்றினார் .
மாநாட்டில் மாவட்டச் செயலாளர் டி.கண்ணன்,மாவட்ட தலைவர் பி.ஜெயராஜ்,எஸ்.சஞ்சீவிகுமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் ஆர்.போஸ் ,ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பாண்டி ,புயல் மன்னன், திமுக க.மயிலை தெற்கு ஒன்றிய செய லாளர் வழக்கறிஞர் சுப்பிரமணி ,வடக்கு ஒன்றிய செயலாளர் தங்கபாண்டி ,தும் மக்குண்டு ஊராட்சி தலைவர் பொன்னழகு சின்னக்காளை ,மாடசாமி, ஜெயபால் , வரவேற்புக்குழு தலைவர் எம்.மூக்கன்,செயலாளர் சி.வனராஜ், பொருளாளர் சி.சின்ன மாயன், துணைத்த லைவர் பி.ஜெயராஜ் ,துணைச் செயலாளர்கள் டி.சக்கர வர்த்தி ,சி.கட்டபொம்மன் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர் . மாநாட்டில் க.மயிலாடும்பாறை ஒன்றியத்தில் 3 தலைமுறைகளாக விவசாயம் செய்து வரும் வன விவசா யிகளுக்கு 2006 வன உரிமை சட்டப்படி பட்டா வழங்க வேண்டும் .மலை மாடு கள் மற்றும் கால்நடைகளை வனப்பகு திகளில் உரிய மேய்ச்சல் சீட்டு வழங்கி அனுமதிக்க வேண்டும் . சேதமடைந்த வருசநாடு -வாலிப்பாறை ,அரசரடி சாலைகளை செப்பனிட்டு தார்ச்சாலை அமைக்க வேண்டும் .கடமலைக்குண் டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலை யத்தை அனைத்து வசதிகளுடன் கொண்ட அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும். வருச நாட்டில் துணை மின் நிலையம் அமைத்து தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.