districts

img

கடலாடியை வறட்சி பகுதியாக அறிவித்து நிவாரணம் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

இராமநாதபுரம், ஜன.13-  கடலாடியை வறட்சி பகு தியாக அறிவித்து   நிவாரணம் வழங்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். இராமநாதபுரம் மாவட் டம் கடலாடி தாலுகாவில் நடப்பாண்டில் போதுமான மழை இல்லாததால் வைகை ஆற்றுத் தண்ணீர் முறையாக வரவில்லை. இத னால் பயிர்கள் கருகி பாதிப்பு ஏற்பட்டுள்ளது எனவே கட லாடி தாலுகா முழுவதையும் வறட்சி பகுதியாக அறி வித்து ஏக்கருக்கு ரூ.30 ஆயி ரம் நிவாரணம் மற்றும் பயிர் காப்பீடு செய்த விவ சாயிகள்  அனைவருக்கும் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் .கட லாடி ஐஓபி வங்கியில் பயிர் காப்பீடு செய்து ஐந்தாண்டு கள் ஆகியும் இழப்பீடு வழங் காமல் விவசாயிகளை மிகுந்த நெருக்கடிக்கு உள் ளாக்கும் வங்கியை கண்டிப் பதுடன் உடனே இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட முழுவதும் 100 சதவீத பயிர் காப்பீட்டு இழப்பீடு வழங்க மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அரசு ஒன்றிய  அரசை வலியுறுத்தி நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கடலா டியில் தமிழ்நாடு விவசாயி கள்  சங்கம் சார்பில் ஆர்ப்பா ட்டம் நடைபெற்றது. கடலாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் பாக நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு சங்க தாலுகா தலைவர் குருசாமி தலைமை வகித்தார். விவசா யத் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கே. கணேசன் துவக்கி வைத்துப் பேசினார். விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் வி.மயில்வாகனன் நிறை வுரையாற்றினார்.  மாவட்ட துணைச் செயலாளர் டி  நவநீதகிருஷ்ணன், தாலுகா செயலாளர் சே.முத்துராம லிங்கம்   உள்ளிட்டோர் பேசி னர். வட்டாட்சியர் உள்ளிட்ட  சம்பந்தப்பட்ட அதிகாரிக ளிடம் கோரிக்கை மனுக் களை விவசாயிகள் சங்கத் தலைவர்கள் வழங்கினர்.