districts

img

ஏழுசுனை கண்மாயில் ஆக்கிரமிப்பை அகற்ற விவசாயிகள் கோரிக்கை

கடமலைக்குண்டு, டிச.18- தேனி மாவட்டம், கடமலைக்குண்டு ஊராட்சிக்கு உட்பட்ட குமணன்தொழு சாலை அருகே சுமார் 6 ஏக்கர் பரப்பளவில் ஏழுசுனை கண்மாய் அமைந்துள்ளது. இந்த கண்மாயை சுற்றிலும் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் தென்னை, முருங்கை உள் ளிட்ட விவசாயம் நடைபெற்று வருகிறது.  கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் இந்த கண்மாய் தூர்வாரப்பட்டு கரைகள் பலப் படுத்தப்பட்டது. இந்த நிலையில் போதிய அளவு மழை இல்லாத காரணத்தால் கடந்த சில ஆண்டுகளாக கண்மாய் வறண்ட நிலை யில் காணப்பட்டது.  இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்ட சிலர் கண்மாயில் ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்ய தொடங்கினர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண் டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால், தற்போது கண்மாயில் பெரும்பாலான பகுதிகளில் தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.  இது தொடர்பாக அந்தப் பகுதி விவ சாயிகள் கூறுகையில், ஆக்கிரமிப்பின் கார ணமாக தற்போது 6 ஏக்கர் கண்மாய் 1 ஏக்க ருக்கும் குறைவானதாக மாறியுள்ளது. எனவே மழைக்காலங்களில் கண்மாயில் நீர் தேக்கி வைக்க முடியவில்லை.  இதனால் வெயில் காலங்களில் நீர் இல்லாமல் விவசாயம் பாதிப்படைகிறது. கண்மாயில் ஆக்கிரமிப்பை அகற்ற கோரி கிராம சபை கூட்டத்தில் கோரிக்கை விடுத் தும் கடமலைக்குண்டு ஊராட்சி நிர்வாகத்தி னர் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனவே மாவட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து ஏழுசுனை கண்மாயில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என தெரிவித்தனர்.