districts

img

சுற்றுச்சூழல் குழு என்கிற பெயரில் வசூல் வேட்டையை கண்டித்து விவசாயிகள் போராட்டம்

திருவில்லிபுத்தூர், டிச.22-  விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவா ரத்தில் செண்பகதோப்பு கோவிலுக்கு செல்லும் பக்  தர்கள் மற்றும் சொந்த விவ சாய நிலங்களுக்கு செல்லும் விவசாயிகளிடமும் வனத்  துறையானது மலைவாழ் மக்களை பகடையாகக் கொண்டு எந்தவித அறி விப்பும் இன்றி சுற்றுச்சூழல்  குழு என்கிற பெயரில் நடத் தும் வசூல் வேட்டையை நிறுத்த வேண்டும். வனத் துறையினர் அமைத்துள்ள சோதனைச்சாவடியை அவர்  களது இடமான வண்டிப் பண்ணையில் அமைத்துக் கொள்ள வேண்டும். காட்  டுப்பன்றி இனத்தை வன விலங்கு பட்டியலில் இருந்து நீக்க பரிந்துரை செய்ய வேண்டும். வனவிலங்கு சட்டப்படி மலையடிவாரப் பகுதியில் கால்நடை செல்ல அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி திரு வில்லிபுத்தூர் அனைத்து விவசாய சங்கங்களின் கூட்ட மைப்பு சார்பில் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் அலுவலகம் முன்பு காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு தமிழ்  நாடு தென்னை விவசாயிகள்  சங்க மாவட்ட தலைவர் முத் தையா தலைமை வகித்தார். முன்னாள் சட்டமன்ற உறுப்  பினர் பொன்னுப் பாண்டி யன், பல்வேறு சங்க நிர்வாகி கள் நாராயணசாமி,  ராமச்சந்  திர ராஜா,  அம்மையப்பன்  ராமமூர்த்தி, சிபிஐ நகரச் செயலாளர் மூர்த்தி ஆகி யோர் பேசினர்.