மதுரை, ஜன.1- மதுரை மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் டிசம்பர் 31 வெள்ளிக்கிழ மையன்று விவசாயிகள் குறைதீர் கூட் டம் ஆட்சியர் அனீஸ் சேகர் தலைமை யில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமாரி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண் டனர். இந்தக் கூட்டத்தில் பிரதான கோரிக் கையான நெல் கொள்முதல் நிலை யங்களில் முறைகேடு நடப்பதாகவும், விவசாயிகளிடம் காரணமில்லாமல் பணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும் என்று கூட்டத்தில் வந்திருந்த விவ சாயிகள் ஒரே கோரிக்கையாக முன்வைக் கப்பட்டது. இதில் குறிப்பாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் நெல்கொள்முதல் செய்த போது ஒரு சில தவறுகள் நடந்துவந் தன. அதனை விவசாயிகளே சரி செய்து வந்தனர். ஆனால் தற்போது கூட்டுறவு சங்கங்கள் மூலம் கொள் முதல் செய்யலாம் என கூறியதால் உள்ளூர் அரசியல்வாதிகள் மற்றும் முக்கிய பெரும்புள்ளிகள் சொசைட்டி தலைவராக உள்ளதால் முறைகேடு நடப்பதாக ஒட்டுமொத்த விவசாயி கள் கூறினர். மேலும் விவசாயிகளிடமிருந்து நெல் ஏற்று கூலி, இறக்கு கூலி, லாரி வாடகை என பெரும் பணம் வசூலிக் கப்படுகிறது. ஏற்கெனவே இருந்த கண்காணிப்புக்குழுவை மீண்டும் கொண்டு வர வேண்டும். முறைகேடு, பண வசூலை தடுக்க ஆட்சியர் நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று விவ சாயிகள் கோரிக்கை வைத்தனர்.
பணம் கொடுக்க தேவையில்லை: ஆட்சியர்
இதற்கு ஆட்சியர் பதிலளிக்கை யில், எந்த காரணத்தைக் கொண்டும் பணம் கொடுக்கத் தேவையில்லை. லாரி வாடகை மற்றும் தவறான முறை யில் யாருக்கும் பத்து பைசா கூட விவ சாயிகள் கொடுக்கத் தேவையில்லை. அதனையும் மீறி விவசாயிகளிட மிருந்து தவறான முறையில் பணம் பெற்றது சம்பந்தமான புகாரை நேரடி யாக என்னிடம் தெரிவிக்கலாம். உட னடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார். நெல் கொள்முதல் செய்ய மறுத்தால் புகார் தெரிவிக்கலாம் என் றார். நெல் கொள்முதல் செய்து அதற் கான பணத்தை பட்டுவாடா செய்ய 15 நாட்கள் முதல் 20 நாட்கள் வரை ஆகிறது என்ற புகாருக்கு, ஒன்று அல்லது இரண்டு நாட்களில் பணம் பட்டுவாடா செய்ய நடவடிக்கை எடுக் கப்படும் என்று ஆட்சியர் கூறினார். மேலும் நெல் கொள்முதல் நிலை யத்தில் நடைபெறும் இந்த புகார் சம் பந்தமாக கண்ட்ரோல் ரூம் அமைக்க அறிவிக்கிறேன் என்றார். விவசாய நிலங்களில் காட்டுப் பன்றிகளின் தொல்லையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். காட்டுப்பன்றி மற்றும் சாதா பன்றியின் தொல்லை போக்க வனத்துறை அதி காரி உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று ஆட்சியர் உத்தரவிட்டார். சாத்தியார் அணையில் தேவை யில்லாமல் தண்ணீர் திறந்துவிடப் பட்டு வீணாகிறதே என்று அந்தப் பகுதி யைச் சேர்ந்த விவசாயிகள் கூறுகை யில், சாத்தியார் அணை தண்ணீரை நம்பியுள்ள மலையில் வசிக்கும் வன விலங்குகள் மற்றும் நேரடி ஆயக்கட்டு விவசாயிகள் இந்தத் தண்ணீரை திறந்து விட்டதால் பாதிக்கப்பட்டுள்ள னர். இதற்கு அதிகாரிகள் தக்க பதில் அளிக்க வேண்டும் என்றனர். அதற்கு பதில் அளித்த பொதுப் பணித்துறை அதிகாரி, சாத்தியார் அணையில் தற்போது 19 அடி தண்ணீர் இருப்பு உள்ளது. இந்த தண்ணீரை நம்பி சுற்றுவட்டார பகுதிகள் உள்ளன என்பது உண்மைதான். நேரடி ஆயக் கட்டு பகுதியான விவசாய நிலங்க ளுக்கு போதுமான அளவு தண்ணீர் உள்ளது என்றார்.
மகள் கல்விக்கடன் வாங்கினால் தந்தைக்கு விவசாயக் கடன் இல்லையா? விவசாயிகள் குமுறல்
மதுரை கள்ளிக்குடியை சேர்ந்த எஸ்.விஸ்வநாதன் என்ற விவசாயி அளித்த மனுவில், கள்ளிக்குடி வட்டம் மேலப்பட்டி கிராமத்தில் விவசாயம் செய்து வருகிறேன். நான் ஒரு சிறு விவசாயி. பிரதமரின் விவசாயிகள் நிதி திட்டத்தில் வருடந்தோறும் ரூ.6ஆயி ரம் வங்கி கணக்கிற்கு வருகின்றது. ஆனால், அதனை பயன்படுத்த முடி யாமல் வங்கி கணக்கு முடக்கப்பட்டு விட்டதாக வங்கியில் தெரிவித்தனர். இது குறித்து வங்கியில் விசாரித்த போது எனது மகளின் கல்விக்காக பெற்ற கடனுக்காக முடக்கி வைக்கப் பட்டதாக கூறப்பட்டது. இதனால் சிறு விவசாயிகளான என்னைப் போன்ற பல விவசாயிகள் ஒன்றிய அரசு வழங் கக்கூடிய விவசாய நல நிதியினை பெற முடியாமல் தவித்து வருகிறோம். எனவே ஆட்சியர் தலையிட்டு நட வடிக்கை எடுக்க வேண்டுமென வலி யுறுத்தினார். மேலும் ஒரு விவசாயியும் முன் வந்தபோது இதே கோரிக்கை சம் பந்தமாக மற்றொரு விவசாயி இதே போல் தனக்கும் நடந்துள்ளதாகவும் தனது மகள் இளங்கலை படிப்பு முடித்து விட்டு முதுகலை பட்டப் படிப்பிற்காக கல்விக் கடன் கேட்ட போது கடன் வழங்க மறுத்ததாகவும், விவசாயிகள் நல நிதியினை பெறமுடியாமல் எடுத்து வைத்துள்ளதாகவும் ஆட்சிய ரிடம் புகார் கூறினார். இதுகுறித்து ஆட்சியர் பதிலளிக் கையில், கல்விக் கடன் வாங்கினால் கட்ட வேண்டியது முறைதான். அதனை கட்டாமல் மேலும் கடன் பெறுவது எப்படி சரியாக இருக்கும். கடன்கள் எல்லாமே தள்ளுபடியாகும் என்ற எண்ணத்தோடு விவசாயிகள் மற்றும் கடன் பெறுவோர் இருக்க வேண்டிய தில்லை என்றார். அப்போது விவசாயி, கல்விக் கடன் கட்ட வேண்டியது உண் மைதான் .ஆனால் படித்து முடித்து வேலை கிடைத்த பின்பு தான் முறை யாக கட்ட முடியும் என்று கூறினார். அதற்கு பதிலளித்த ஆட்சியர், கல்விக் கடனை அவர்கள் தான் கட்ட வேண்டும் என்று இல்லையே. தந்தை யாகிய நீங்களும் கடனை கட்டலாம் என்று கூறினார். அப்போது விவசாயி கள் ஒரு சிலர். விவசாய கடனையும் கல்விக் கடனையும் ஒன்றாக சேர்க்கா மல் விவசாயிகளுக்கு வழங்க வேண் டிய நல நிதியினை முறையாக வழங்க வேண்டும். அதற்கு ஆட்சியர் நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதற்கு ஆட்சியர் பரிந்துரை செய்வதாக கூறிவிட்டார்.