districts

20 அடி பள்ளத்தில் விழுந்து தொழிலாளி பலி

தேனி ,ஜூன்.1-

     வைகை அணை அருகே தனியார் கிரஷரில் வேலைக்கு சென்ற தொழிலாளி 20 அடி பள்ளத்தில் விழுந்து இறந்த தாக ஜெயமங்கலம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது .

    வைகை அணை அருகே முதலக்கம்பட்டியை சேர்ந்தவர் சின்னகதிர்வேல் மகன் பிரகாஷ் (43).இவர் பெயிண்ட் அடிக்கும் தொழில் செய்து வந்தார் .கடந்த இரண்டு நாட்களாக குள்ளப்புரத்தில் உள்ள ஜெயசுதா கிரஷர் வளாகத்தில் பணிபுரிந்து வந்துள்ளார் .20 அடி பள்ளத்தில் விழுந்ததில் படுகாயமடைந்த  பிரகாஷ் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டார் .அங்கு சிகிச்சை பலனின்றி உயிரி ழந்தார்.

   இது குறித்து பிரகாஷ் மகன் விஜய் கொடுத்த புகாரின் பேரில் ஜெயமங்கலம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.