districts

img

ஜோகில்பட்டியில் அடிப்படை வசதி செய்து தர வலியுறுத்தல்

விருதுநகர், ஆக.14- விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே உள்ள ஜோகில்பட்டி தெற்குத் தெருவில் அடிப்படை வசதி செய்து தர வலியுறுத்தி அப்பகுதியினர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து அப்பகுதி யைச் சேர்ந்த சந்திரகலா வழங்கிய மனுவில்,  “ஜோகில்பட்டி தெற்குத் தெருவில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகிறோம். இங்குச் சாலை வசதி, தெருவிளக்கு வசதி மற்றும் கழிவு நீர் செல்ல முறையான ஏற்பாடுகள் இல்லை.  இங்குள்ள காலனி வீடுகள் பராமரிப்பின்றி சிதைந்த நிலையில் உள்ளன. இதுகுறித்து ஏற்கனவே மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சம் மந்தப்பட்ட ஊராட்சி மூலம் நிதி ஒதுக்கி அடிப்படை வசதி களைச் செய்து தர வேண்டு மென” தெரிவித்துள்ளார்.