districts

img

23 ஆவது வார்டில் குடிநீரில் சாக்கடை கலப்பதை தடுத்து, சாலையை சீரமைத்திடுக!

மதுரை, டிச.6-  விலைவாசி உயர்வுக்கு காரணமான பெட்ரோல் - டீசல் விலை உயர்வை ஒன்  றிய பாஜக அரசு கட்டுப் படுத்த வேண்டும். மதுரை மாநகராட்சி 23 ஆவது வார்  டில் பாதாளச்சாக்கடை கழிவு நீர் செல்லும் குழாய்களை உடனடியாக சரிசெய்ய வேண்டும். குடிநீரில் சாக் கடை நீர் கலப்பதை தடுக்க வேண்டும். செல்லூர் பகுதி யில் குண்டும் குழியுமான சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் வடக்கு - 1 ஆம் பகுதிக்குழு சார்பில் தெருமுனைக்கூட்டம் நடை பெற்றது. செல்லூர் 60 அடி சாலை  தாகூர் நகர் அருகில் 23  ஆவது வார்டு கட்சிக்கிளை கள் சார்பில் நடைபெற்ற கூட்டத்திற்கு கிளைச் செய லாளர் எஸ்.பாலசுப்பிரமணி தலைமை வகித்தார். கிளைச் செயலாளர் வி.பழனி முன்னிலை வகித்தார். மாநி லக்குழு உறுப்பினர் எஸ்.பாலா உரையாற்றினார். பகு திக்குழு செயலாளர் வி.  கோட்டைச்சாமி, மாவட்டக் குழு உறுப்பினர்-கவுன்சிலர் டி. குமரவேல், முன்னாள்  மாமன்ற உறுப்பினர்கள் க. திலகர், பா. பழனியம்மாள், பகுதிக்குழு உறுப்பினர் ஆறு முகபெருமாள் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். மீனாட்சிசுந்தரம் நன்றி கூறினார்.