districts

வங்கிக் கணக்கு விவகாரம்: ரிசர்வ் வங்கிக்கு ஓபிஎஸ் கடிதம்

சென்னை, ஜூலை 23- அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராகவும், திண்டுக்கல் சீனி வாசன் பொருளாள ராகவும் தேர்ந் தெடுக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து அதிமுக பொருளாளராகத் திண்டுக்கல் சீனிவாசன் நியமனம் செய்தது குறித்து  எடப்பாடி பழனிசாமி வங்கிகளுக்குக் கடிதம் எழுதினார். இதைத் தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வ மும் அதிமுக கணக்கு வைத்துள்ள வங்கிகளுக்கு அன்றே கடிதம் எழுதி யிருந்தார். அந்த கடிதத்தில், “என்னைக்  கேட்காமல் வங்கி வரவு, செலவு கணக்கு களை யாரிடமும் ஒப்படைக்கக் கூடாது. நான்தான் கட்சியின் பொருளாளராகத் தொடர்கிறேன். கட்சியின் விதிகளை மீறி நடைபெற்ற பொதுக்குழுவில் புதிய  பொருளாளராக திண்டுக்கல் சீனிவா சனை நியமனம் செய்தது செல்லாது. இந்நிலையில், ஓபிஎஸ் கடிதத்தில் போதுமான ஆதாரங்கள் இல்லை என  கூறி அவரின் கடிதத்தை வங்கிகள்  நிராகரித்தன. மேலும் எடப்பாடி பழனி சாமியின் கடிதம் ஏற்கப்பட்டுள்ளதாக வங்கிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள் ளது. இந்நிலையில் அதிமுகவின் 7 வங்கிக் கணக்குகளை முடக்க வேண்டும் என  சென்னை மண்டல ரிசர்வ் வங்கி இயக்கு நருக்கு ஓ. பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.