பழனி நகராட்சி சார்பில், வையாபுரிக்குளம் சுத்தப்படுத்தும் பணியை சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் துவக்கி வைத்தார். முன்னதாக பழனி நகரில் பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். இதில் நகராட்சி அதிகாரிகள், தி.மு.க. கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர். பழனி பாலசமுத்திரம், குரும்பபட்டி ,மயிலாடும்பாறை, ஆயக்குடி ஹவுஸசிங் போர்டு கோதைமங்கலம் ,முல்லை நகர் ஆகிய இடங்களில் நியாய விலை கடைகளை திறந்து வைத்தார் .