districts

img

மானாமதுரை எம்எல்ஏ அலுவலகத்தில் இ-சேவை மையம் துவக்கம்

சிவகங்கை,மே 7-  சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசின் இ- சேவை  மையத்தை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் தொடங்கி வைத்தார்,  இந்த இ-சேவை மையத்தில் சாதிச் சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், முதியவர், விதவை சான்றிதழ், மாற்றுத்திறனாளி சான்றிதழ் மற்றும் பிற சான்றிதழ்கள்  பெற விண்ணப்பிக்கலாம். இதனை மக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் கேட்டுக் கொண்டார். இதில் இளையான்குடி சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் மதியரசன், கீழநெட்டூர் ஊராட்சி மன்றத் முன்னாள் தலைவர் அய்யாசாமி, இளையான்குடி ஒன்றிய செயலாளர் வெங்கட்ராம், மானாமதுரை இளைஞரணி மயில்வாகனன்  மற்றும் பலர் பங்கேற்றனர்.