districts

img

குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

இராமநாதபுரம், ஏப்.28- ஒப்பந்த தொழிலாளர்கள் சம்ப ளத்தை குறைக்கும் அரசாணையை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி இராமநாதபுரத்தில் தமிழ்நாடு குடிநீர் வடி கால் வாரிய ஊழியர் சங்கம் சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்டச் செயலாளர் எம்.சிவாஜி தலைமை தாங்கினார். குடிநீர் வடிகால் வாரிய சங்க மாவட்ட செயலாளர் எம்.மலைராஜன், கட்டுமான சங்க மாவட்ட தலைவர் ஆர்.வாசுதேவன், ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.ஏ. சந்தானம் ஆகியோர் விளக்கிப் பேசி னர். சிஐடியு மாநிலச் செயலாளர் சி.திரு வேட்டை நிறைவுரையாற்றினார். திண்டுக்கல் திண்டுக்கல் மணிக்கூண்டு முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கிளைத்தலைவர் அப்துல்பசீர் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டத் தலைவர் கே.பிரபாகரன், சுந்தரம், சேகர் அய் யப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.