districts

img

மதுரையில் டிஆர்இயு ஆர்ப்பாட்டம்

மதுரை, பிப்.15- மதுரை கோட்டம் தட்சிணா ரயில்வே தொழிலா ளர் சங்கம் (டிஆர்இயூ) சிஐடியு சார்பில் மதுரை ரயில் நிலையம் மேற்கு நுழைவு வாயில் அருகில் கோட்ட உதவிச் செயலாளர் என்.கார்த்திக்சங்கிலி தலைமை யில் கோரிக்கை முழக்கம் ஆர்ப்பாட்டம் திங்களன்று நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு, திண்டுக்கல் கிளை செயலா ளர் சி.காட்டுராஜா முன்னிலை வகித்தார். கோட்ட இணை செயலாளர் ஆர்.சங்கரநாராயணன் சிறப்பு ரையாற்றினார். கோட்ட உதவிச் செயலாளர் கே. குமார், உதவிச் செயலாளர் ஜே.சவுந்திரராஜன், உத வித் தலைவர் எம்.ஜெயராஜசேகரன், பொதுக்கிளை தலைவர் எஸ்.சலீம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். செங்கோட்டை கிளை செயலாளர் கே.உன்னிகிருஷ்ணன் நன்றி கூறினார். இதில் பலர் கலந்துகொண்டனர்.  ஆர்ப்பாட்டத்தில், நிரந்தரம் அல்லாத ஊழி யர்களை ரயில்வே கேட்களில் பணியமர்த்துவதை நிர்வாகம் தவிர்க்க வேண்டும், ரயில் மற்றும் சாலை பயணிகளின் பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்பும் வகையில் படித்த இளைஞர்கள் மற்றும் முன்னாள் இராணுவத்தினரை நிரந்தர ஊழியர்களாக பணியமர்த்த வேண்டும் என்று கோரிக்கை முழக்கங்கள் எழுப்பினர்.