districts

img

2 நாள் மழைக்குப் பிறகு கும்பகோணத்தில் களைகட்டிய தீபாவளி விற்பனை

கும்பகோணம், அக்.23 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத் தில் தீபாவளியை முன்னிட்டு கடந்த இரண்டு தினங்களாக விட்டுவிட்டு மழை பெய்து வந்த நிலையில், வெளி மாநிலங்க ளிலிருந்தும் மாவட்டங்களிலிருந்தும் வந்திருந்த வியாபாரிகள் மிகவும் சிர மப்பட்டனர். இந்நிலையில் தீபாவளிக்கு முதல் நாளான ஞாயிறன்று, கும்பகோணத்தை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து பொது மக்கள் வரத் தொடங்கினர். கும்பகோ ணம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஆதிகும்பேஸ்வரர் கோயில் வரை உள்ள சாலைகளில் இரு பக்கங்களும் தற்காலிக தரைக்கடை அமைக்கப்பட்டிருந்தன. இதில், ரெடிமேட் ஆடைகள், அழகுப் பொ ருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள், வீட்டு  உபயோகப் பொருட்கள் என வியாபாரிகள் விற்பனையில் ஈடுபட்டு வந்தனர். கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த மாற்றுப் பாதைகள் அமைக்கப்பட்டு, கும்பகோ ணம் சரக டிஎஸ்பி அசோகன் தலைமை யில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் ட்ரோன் கேமரா மூலம் தீவிர கண்கா ணிப்பில் ஈடுபட்டனர்.  இந்த ஆண்டு மழை காரணமாக, கும்பகோணத்தில் தீபாவளி விற்பனை யில் மந்தம் ஏற்பட்டாலும், தீபாவளிக்கு முந்தைய நாளான ஞாயிறன்று பொது மக்கள் அதிகளவில் வந்து, தங்களுக்கு தேவையானவற்றை வாங்கிச் சென்ற னர். இதனால் கும்பகோணம் பகுதி முழுவ துமே மக்கள் வெள்ளத்தில் நிரம்பியது.