தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் (மகளிர் திட்டம்) கீழ் கோட்டூரில் செயல்பட்டு வரும் துணிப்பை உற்பத்தி பயிற்சி மையம் மற்றும் அழகு நிலைய பயிற்சி மையம் ஆகியவற்றின் செயல்பாடுகளை தேனி மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளீதரன் திங்களன்று ஆய்வு செய்தார். ஆய்வின் போது, மகளிர் திட்ட அலுவலர் ஜெ.ரூபன் சங்கர் ராஜ், உதவித் திட்ட அலுவலர்கள் செல்வராஜ், செந்தில்குமார், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.