districts

img

புதிய பென்சன் திட்டம் ரத்து கோரி பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

சிவகங்கை,மார்ச் 25- தமிழகத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு தற்போது நடை முறையில் உள்ள புதிய தன்பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்திட வேண்டு மென வலியுறுத்தி  9 ஆசிரியர் இயக்கங்கள் அடங்கிய இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்ட மைப்பினர் சிவகங்கையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் நாகராஜன் தலைமை வகித்தார். ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன் , உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொதுச்செயலாளர் சேதுசெல்வம், பல்வேறு சங்க நிர்வாகிக ளான இளமாறன், முத்துச்சாமி, இரஞ்சித் குமார், திப்புசுல்தான்,  கலைச்செல்வி ஆகியோர் பேசினர்.