districts

img

அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் சிபிஎம், தீ.ஒ.முன்னணி மரியாதை-உறுதியேற்பு

தேனி, ஏப்.15-  அண்ணல் அம்பேத்கரின் 132  வது பிறந்தநாளை முன்னிட்டு ஏப்ரல் 15 அன்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு  முன்னணி மற்றும் பல்வேறு அமைப்புகளின் சார்பில் அவரது சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தி, உறுதிமொழி யேற்றனர். இராஜபாளையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன், அம்பேத்கர் சிலைக்கு  மாலையணிவித்து மரியாதை செலுத்தினார். தேனியில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு  முன்னணி சார்பில் மலை அணி வித்து மரியாதை செலுத்தப்பட்டது. தேனி அருகே அரண்மனைப்புதூ ரில் உள்ள அண்ணல் அம்பேத்க ரின் உருவ சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேனி செய லாளர் ஏ.வி.அண்ணாமலை, மாவட்ட செயற்குழு உறுப்பினர்  சி.முருகன்,  விவசாயத்தொழிலா ளர் சங்க செயலாளர் கண்ணன், எழுத்தாளர் அல்லி உதயன், தீண்  டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட  செயலாளர் இ.தர்மர் உள்பட ஏரா ளமானோர் மலை அணிவித்து மரி யாதை செலுத்தினர். பெரியகுளத்  தில் அன்னாரது உருவ சிலைக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்,.ராமச்சந்திரன்,  சு.வெண்மணி, தாலுகா  செயலாளர் எம்.வி.முருகன் உள்  ளிட்ட தலைவர்கள் மாலை அணி வித்து மரியாதை செலுத்தினர்.  

தேனி நேரு சிலை அருகே தமிழ்  நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் ஜனநாயக முற்போக்கு அமைப்புகளின் கூட்டமைப்பு சார்  பில், அம்பேத்கர் பிறந்த நாளில்  இந்திய அரசியலமைப்பு சட்டத்தை  பாதுகாக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் தர்மர் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் டி.கே.சீனிவாசன், மாவட்ட பொருளாளர் கோபால கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் அரசியல மைப்பு சட்டத்தை பாதுகாக்க உறுதிமொழி ஏற்றனர். தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில தலைவர்  செல்லகண்ணு சிறப்புரையாற்றி னார்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் அண்ணா மலை, காங்கிரஸ் மாவட்ட தலை வர் முருகேசன், விடுதலை சிறுத்  தைகள் கட்சி தேனி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தமிழ்வா ணன், திராவிடர் கழக மாவட்ட செயலாளர் மணிகண்டன், சமூக நல்லிணக்க பேரவை தலைவர் முகமது சபி, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்  குழு உறுப்பினர் சி.முருகன், சிஐ டியு மாவட்ட தலைவர் ஜெய பாண்டி, மாவட்ட பொருளாளர் ஜி. சண்முகம், ம.தி.மு.க., இந்திய யூனி யன் முஸ்லிம் லீக், ஆதித்தமிழர் பேரவை, தமிழ்ப் புலிகள் கட்சி, ஆதித்தமிழர் கட்சி உள்பட பல்  வேறு அமைப்புகளின் நிர்வாகி கள் கலந்து கொண்டனர். முன்ன தாக அங்கு அம்பேத்கர் உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். 

மதுரை மாநகர் 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மதுரை மாநகர் மாவட்டக்குழு சார்பில் மாவட்டச் செயலாளர் மா.  கணேசன் தலைமையில் அவுட் போஸ்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மூத்த தலைவர் சி. ராமகிருஷ்ணன், மாநி லக்குழு உறுப்பினர் இரா. விஜய ராஜன், துணை மேயர் டி. நாக ராஜன், மாவட்ட செயற்குழு உறுப்  பினர்கள் ஜா. நரசிம்மன், அ. ரமேஷ், இரா. லெனின், வை. ஸ்டா லின், மாமன்ற உறுப்பினர் வை. ஜென்னியம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மதுரை மாநகர் - புறநகர் மாவட்டக்குழுக்கள் சார்பில் அர சியல் சாசன பாதுகாப்பு உறுதி மொழியேற்பு மாநில தலைவர்  த. செல்லக்கண்ணு தலைமையில்  நடைபெற்றது தமிழக மக்கள்  ஒற்றுமை மேடை ஒருங்கிணைப்பா ளர் பேராசிரியர் அருணன், பல் சமய உரையாடல் குழு செயலா ளர் பெனடிக் பர்ண பாஸ், மனித  நேய மக்கள் கட்சி வடக்கு மாவட்டச் செயலாளர் சீனி அஹமது, தீண் டாமை ஒழிப்பு முன்னணி மதுரை மாநகர் மவட்டத் தலைவர் ஆர்.  சசிகலா, செயலாளர் எம். பால சுப்பிரமணியன், பொருளாளர் ஜா.  நரசிம்மன் புறநகர் மாவட்டத் தலை வர் செ. ஆஞ்சி, செயலாளர் செ.  முத்துராணி பொருளாளர் மகா லிங்கம் உள்பட பல்வேறு அமைப்பு களைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக மதுரை மாநகராட்சி  அறிஞர் அண்ணா மாளிகை அரு கில் இருந்து சாதியத்திற்கு எதி ரான சமத்துவ பேரணி நடைபெற் றது. 

கருத்தரங்கம்

அண்ணல் அம்பேத்கரின் 132 பிறந்த தினத்தையொட்டி அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் “அரசியல் சட்டத்தின் மாண்புகளை பாதுகாப்போம்“ என்ற தலைப்பில் சிவகாசியில் கருத்தரங்கம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் பி.கார்க்கிச் செல்வன் தலைமை தாங்கினார். ராம்குமார் வரவேற்றார். தமுஎகச மாநில பொதுச்செயலாளர் ஆத வன் தீட்சண்யா, தமுஎகச மதிப்புறு தலைவர் ச.தமிழ்செல்வன் ஆகி யோர் கருத்துரையாற்றினர். வழக்கறிஞர் சங்க மூத்த நிர்  வாகிகள் பி.மாரிமுத்து, ரவீந்தி ரன், மாநில செயலாளர் கே. பாண்டீஸ் வரி, மாநிலக் குழு உறுப்  பினர் எம்.சுப்புராம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாவட்டச் செயலாளர் டி.சத்தியராஜ் உறுதி மொழி வாசித்தார். முடிவில் கார் மேகம் நன்றி கூறினார்.  விருதுநகர் விருதுநகர் மாவட்டம் முழு வதும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் சார்பில் டாக்டர் அம்பேத்கரின் படம் வைத்து மாலை அணிவித்து உறுதிமொழி ஏற்கப்பட்டது.  விருதுநகர் அருகே உள்ள சூலக்கரை, சத்திரரெட்டியபட்டி, வெள்ளூர் ஆகிய பகுதிகளில் நடை பெற்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி யில் தீ.ஒ.முன்னணியின் மாவட்டத் தலைவர் எம்.முத்துக்குமார், மாநி லக்குழு உறுப்பினர் எம்.ஊர்காவ லன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.வேலுச்சாமி, மூத்த தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சாத்தூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றம் பாலர் சங்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச் சியில் நகரத் தலைவர் சண்முக முனீஸ்வரன், வெண்மணி உள் ளிட்டோர் பங்கேற்றனர். திருத்தங்கல்லில் ஜனநாயக மாதர் சங்க மாநில செயலாளர் எஸ். லட்சுமி, சிபிஎம் ஒன்றிய செயலா ளர் பி.பாலசுப்பிரமணியன் உள் ளிட்டோர் பங்கேற்றனர்

ஸ்ரீரெங்காபுரத்தில் மூத்த தலை வர் கே.சுப்பாராஜ், சிபிஎம் ஒன்றிய  செயலாளர் சரோஜா உள்ளிட் டோர், காரியாபட்டி, ஆவியூரில் சிபிஎம் வட்ட செயலாளர் ஏ.அம் மாசி, முகமது அலி ஜின்னா உள் ளிட்டோர் பங்கேற்றனர். இராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா ளர் கே. பாலகிருஷ்ணன் மாலை  அணிவித்து மரியாதை செலுத்தி னார். நகரச் செயலாளர் பி. மாரி யப்பன் தலைமை தாங்கினார்.தீண்டாமை ஒழிப்பு முன்னணியின்  மாநிலப் பொதுச் செயலாளர் கே. சாமுவேல்ராஜ், கட்சியின் மாவட்ட செயலாளர் கே.அர்ஜுனன்,  மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.  குருசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து விடு தலை சிறுத்தைகள் கட்சியின் பேர ணியை கே.பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். இராஜை மேற்கு ஒன்றியம் முக வூர் பகுதியில் இந்திய ஜனநாயக  வாலிபர் சங்கம் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தையல்  சங்கம் சார்பில் அம்பேத்கரின் பிறந்த நாள் விழா கொண்டாடப் பட்டது.  வாலிபர் சங்கத்தின் மாநி லச்செயலாளர் சிங்காரவேலன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாதர் சங்க விருது நகர் மாவட்ட தலைவர் தெய்  வானை, தையல் சங்க மாவட்ட  பொருளாளர் பானு பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர் புயல் கலைக்குழு பறை இசை யோடு உறுதிஏற்பு நிகழ்ச்சி நடை பெற்றது. 

திண்டுக்கல் 

திண்டுக்கல்லில் பேருந்து நிலையம் முன்பாக அவரது உரு வப்படத்திற்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தி உறுதி மொழி ஏற்கப்பட்டது. இந்  நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்  கத்தின் நகர தலைவர் வைத்தி லிங்க பூபதி தலைமை வகித்தார்.  மாணவர் சங்க மாவட்ட செயலா ளர் முகேஷ், மாமன்ற உறுப்பினர் ஜோதி பாசு உள்பட பலர் கலந்து கொண்டனர். திண்டுக்கல் ஆர்.எம்.காலனி யில் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பாக டாக்டர் அம்பேத்க ரின் பிறந்த தின விழா கொண்டா டப்பட்டது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பாலபாரதி சிறப்பு ரையாற்றினார். சிபிஎம் மாமன்ற  கவுன்சிலரும் மக்கள் ஒற்றுமை  மேடை மாவட்ட அமைப்பாளரு மான கே.எஸ்.கணேசன் தலைமை வகித்தார். திண்டுக்கல் மேயர் இள மதி ஜோதிபிரகாஷ், சமூக செயற்பாட்டாளர் எவிடென்ஸ் கதிர், அருட்தந்தை பிலிப் சுதாகர், காந்தி கிராம பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர் ஸ்ரீபால சுந்தரி, உள்ளிட்ட பலர் பேசினர்.

இராமநாதபுரம்

இராமநாதபுரத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின்  சார்பாக உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்டத் தலை வர் டாக்டர் வான் தமிழ் இளம் பரிதி தலைமை வகித்தார். மாவட்ட செய லாளர் என் கலையரசன், சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் ஆர்.  குருவேல், மாதர் சங்க மாவட்ட செயலாளர் இ.கண்ணகி ஆகி யோர் பேசினர். 

சிவகங்கை 

சிவகங்கை, காரைக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் மரியாதை செலுத்தப் பட்டது. சிவகங்கையில் மாவட்ட செயலாளர் தண்டியப்பன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்  முத்துராமலிங்க பூபதி, தீண்டாமை  ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலா ளர் ஆர். வீரையா உள்பட பலர் பங்கேற்றனர். காரைக்குடியில் தாலுகா செய லாளர் அழகர்சாமி தலைமையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கள் கருப்புச்சாமி, மோகன், சேது ராமன் ஆகியோர் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.